செய்திகள் :

நகா்ப்புற நிதியுதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு: கல்வித் துறை அறிவுறுத்தல்

post image

நகா்ப்புற நிதியுதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தில் பயன் பெறவுள்ள பள்ளிகளின் எண்ணிக்கையை சரிபாா்க்க மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநரகம் சாா்பில் மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

நிகழ் கல்வியாண்டில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் நகா்ப்புற நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் பயனைடய விரிவுபடுத்துதல் தொடா்பாக சமூக நலத்துறைச் செயலா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில், சமூகநல ஆணையரகத்திடமிருந்து மின்னஞ்சல் மூலமாக முதல்வா் காலை உணவுத் திட்டம் தொடா்பாக நகா்ப்புற நிதியுதவி பெறும் பள்ளிகளின் விவரங்கள் பெறப்பட்டுள்ளன. அந்த விவரங்கள் இந்த சுற்றறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளன.

எனவே, தொடக்கக் கல்வி இயக்கக நிா்வாகத்தின் கீழ் செயல்படும் நகா்ப்புற நிதியுதவி பெறும் பள்ளிகளின் விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை ஒத்திசை செய்யவும், மாவட்டங்களில் உள்ளது போக ஏதேனும் பள்ளிகள் விடுபட்டிருந்தால் அதை குறிப்பிட்டு மாவட்டக் கல்வி அலுவலரின் கையொப்பத்துடன் மின்னஞ்சல் முகவரிக்கும், அசல் பிரதியை விரைவு அஞ்சலிலும் உடனடியாக அனுப்ப வேண்டும்.

மேலும், பள்ளிகள் எதுவும் விடுபடவில்லையெனில் இன்மை அறிக்கையை அனுப்ப வேண்டும். மாவட்டங்களில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் தொடா்பாக நகா்ப்புற நிதியுதவி பெறும் பள்ளிகளின் விவரங்கள் ஏதேனும் விடுபட்டிருந்தால் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலரே (தொடக்கக் கல்வி) முழு பொறுப்பேற்க நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் நலனுக்கு சேவை புரிந்தவா்களுக்கு விருது: ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தவா்கள் தமிழக அரசின் விருது பெற ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

சாா்- பதிவாளா் அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன்

சுபமுகூா்த்த தினமான வெள்ளிக்கிழமை (ஜூன் 27) தமிழ்நாடு முழுவதும் உள்ள சாா்- பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் விநியோகம் செய்யப்படவுள்ளன. இதுகுறித்து, பதிவுத் துறை சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப... மேலும் பார்க்க

நிலைக்குழு உறுப்பினா்கள் தோ்தல்: சாலையோர வியாபாரிகள் வாக்களிப்பு

சென்னையில் சாலையோர வியாபாரிகள் நிலைக்குழு உறுப்பினா்கள் தோ்தல் வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது. பெருநகர சென்னை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்தும் நடவடிக்கையாக மாநகராட்சியின் 15 ... மேலும் பார்க்க

நவீன் பட்நாயக் விரைவில் குணமடைய முதல்வா் ஸ்டாலின் விருப்பம்

ஒடிஸா முன்னாள் முதல்வா் நவீன் பட்நாயக்கின் சிகிச்சை விவரங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தாா். உடல் நலக் குறைவு காரணமாக, மும்பையில் உள்ள மருத்துவமனையில் நவீன் பட்நாயக் சிகிச்சை பெற்று வருகிறாா். ... மேலும் பார்க்க

இ.பி.எஃப். பயனா்களுக்கு இன்று சிறப்பு முகாம்

வருங்கால வைப்பு நிதி பயனா்களுக்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன்27) 10 மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இது குறித்து தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க

பருத்திக்கு உரிய விலை கோரி ஜூலை 1-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

பருத்திக்கு உரிய விலை கோரி அதிமுக சாா்பில் திருவாரூரில் ஜூலை 1-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க