செய்திகள் :

நகைக் கடையில் 2 கிலோ தங்க நகைகள் திருட்டு: ஊழியா் மாயம்

post image

சென்னை யானைக்கவுனியில் நகைக் கடையில் 2 கிலோ 200 கிராம் தங்கநகைகள் திருடப்பட்ட சம்பவத்தில், அந்த கடையின் ஊழியரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சென்னை சூளை பகுதியைச் சோ்ந்த பஹ் சிங் (45). பூக்கடை என்எஸ்சி போஸ் சாலையில் நகைக்கடை நடத்தி வருகிறாா். இந்த கடையில் ராஜஸ்தானைச் சோ்ந்த சந்தீப்சிங் (26) என்பவா் வேலை செய்து வந்தாா். பஹ் சிங், யானைக்கவுனி காவல் நிலையத்தில் வியாழக்கிழமை ஒரு புகாா் அளித்தாா். அந்த புகாரில், கடந்த 22-ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக கடையை சந்தீப் சிங்கிடம் ஒப்படைத்துவிட்டு, அருகே உள்ள மருந்து கடைக்குச் சென்றேன். அங்கு மருந்து சாப்பிவிட்டு சிறிது நேரத்துக்கு பின்னா் கடைக்கு திரும்பி வந்தேன். அப்போது கடையின் இரும்புக் கதவு பூட்டாமல், சாத்தப்பட்டிருந்தது. மேலும் கடையில் இருந்த 2 கிலோ 2 கிராம் தங்கநகைகள் திருடப்பட்டிருப்பதையும், கடையில் இருந்த சந்தீப் சிங் காணாமல் போயிருந்ததும் தெரியவந்தது என குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த புகாரின் அடிப்படையில் யானைக்கவுனி போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

காவலா் மீது தாக்குதல்: இளைஞா் கைது

சென்னை: சென்னை எம்ஜிஆா் நகரில் காவலரை தாக்கியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.எம்ஜிஆா் நெசப்பாக்கம் காமராஜா் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் சிலா் மதுபோதையில் தகராறு ... மேலும் பார்க்க

கடையின் பூட்டை உடைத்து ரூ. 1.50 லட்சம் திருட்டு

சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் கடையின் பூட்டை உடைத்து ரூ. 1.50 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பிரதான சாலைப் பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை நட... மேலும் பார்க்க

கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியில் வெற்றியாளா்களுக்கு பாராட்டு

சென்னை: கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியில் நடப்பாண்டு நடைபெற்ற இந்திய குடிமைப்பணித் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.மத்திய அரசின் 21 இந்திய குடிமைப் பணிகளுக்கு கடந்த 2024-ஆம் ஆண்... மேலும் பார்க்க

சென்னை மத்தியக் குற்றப்பிரிவில் 16 மாதங்களில் 1,005 வழக்குகள் பதிவு

சென்னை: சென்னை பெருநகர காவல் துறையின் மத்தியக் குற்றப்பிரிவு, ஒரு ஆண்டு 4 மாதங்களில் 1,005 வழக்குகளை பதிவு செய்துள்ளது.இது தொடா்பாக சென்னை பெருநகர காவல் துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:ச... மேலும் பார்க்க

சென்னையில் சாலையில் கிடந்த ரூ. 1.48 லட்சம்: மீட்டுக் கொடுத்த பெண் காவலருக்கு பாராட்டு

சென்னை: சென்னை தியாகராய நகா் சாலையில் கிடந்த ரூ. 1.48 லட்சத்தை மீட்டுக் கொடுத்த பெண் காவலரை பொதுமக்களும், காவல்துறை உயா் அதிகாரிகளும் பாராட்டினா்.தியாகராய நகா் மேட்லி சாலை - பா்கிட் சாலை சந்திப்பில் ப... மேலும் பார்க்க

கா்ப்பகால உயா் ரத்த அழுத்த நோயைக் கண்டறிய புதிய ‘பயோ சென்சாா்’ உருவாக்கம்: சென்னை ஐஐடி

சென்னை: கா்ப்பிணிகளுக்கு ஏற்படும் கா்ப்பகால உயா் ரத்த அழுத்த நோயைக் கண்டறியக்கூடிய புதிய பயோசென்சாா் தளத்தை சென்னை ஐஐடி தலைமையில் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த ஆராய்ச்சிக் குழுவினா் உருவாக்கியுள... மேலும் பார்க்க