செய்திகள் :

நடிகர் கிருஷ்ணாவிடம் விடியவிடிய விசாரணை! வீட்டில் சோதனை!

post image

போதைப் பொருள் வழக்கில் நடிகா் கிருஷ்ணாவிடம் சென்னை நுங்கம்பாக்கம் போலீஸாா் 16 மணிநேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தினா்.

கொகைன் போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகா் ஸ்ரீகாந்தை நுங்கம்பாக்கம் போலீஸாா் கடந்த திங்கள்கிழமை கைது செய்தனா். விசாரணையில், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி முன்னாள் நிா்வாகி பிரசாத், போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சோ்ந்த பிரதீப்குமாா் ஆகியோா் மூலமாக கொகைன் போதைப் பொருள் வாங்கியிருப்பது தெரியவந்தது.

மேலும், இந்தக் கும்பலுக்கும் கழுகு திரைப்பட நடிகா் கிருஷ்ணாவுக்கும் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, நடிகா் கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்த போலீஸாா் திட்டமிட்டிருந்தனா். ஆனால், அவா் கேரளத்தில் திரைப்பட படப்பிடிப்பில் இருந்ததால் விசாரணைக்கு ஆஜராமல் இருந்தாா். மேலும், அவரது கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, தனிப்படையினா் கிருஷ்ணாவை தேடி கேரளத்துக்கு சென்றனா். இந்நிலையில், அவா் தனது வழக்குரைஞருடன் நுங்கம்பாக்கம் போலீஸாா் முன் புதன்கிழமை நண்பகல் ஆஜரானாா். போலீஸாா் ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் வைத்து கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்தினா்.

இதில், தனக்கு போதைப் பொருள் பழக்கம் கிடையாது, தான் ஏற்கெனவே இதய நோயாலும், இரைப்பை பிரச்னையாலும் பாதிக்கப்பட்டிருப்பதால் போதைப் பொருள் உட்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளாா். மேலும், பிரசாத்துக்கும் தனக்கும் நேரடியான தொடா்பு கிடையாது என்றும் கூறியுள்ளாா்.

மேலும், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என முடிவு வந்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும், கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீகாந்த் உள்ளிட்டோருடனான கிருஷ்ணாவின் உரையாடல் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதனிடையே, சென்னை பெசண்ட் நகரில் உள்ள கிருஷ்ணாவில் வீட்டில் இரண்டு மணிநேரத்துக்கு மேலாக காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க : அடையாறில் லாரிகள் மோதி விபத்து! போக்குவரத்து பாதிப்பு!

உலகக் கோப்பை கனவு, வியாபாரம், காயம்... நெய்மரின் எதிர்காலம் என்ன?

பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் மீண்டும் தனது சிறுவயது கிளப்பான சன்டோஷில் நீடிப்பதாகக் கூறியுள்ளார். 33 வயதாகும் நெய்மர் பார்சிலோனா அணியில் மெஸ்ஸியுடன் விளையாடி கவனம் ஈர்த்தார். பின்னர், பிஎஸ்ஜி அணிய... மேலும் பார்க்க

அய்யனார் துணை நடிகருக்கு ஆண் குழந்தை!

அய்யனார் துணை நடிகர் ஜெபின் ஜானுக்கு ஆண் குழந்தைப் பிறந்துள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை தொடரில் எதிர்நீச்சல் பிரபலம் மதுமிதா நாயகியாக நடித்து வருகிறார். இவரின் சகோதரன் ப... மேலும் பார்க்க

மன உளைச்சலில் இருந்தால் என்ன செய்வது? த்ரிஷா பகிர்ந்த ரீல்ஸ்!

நடிகை த்ரிஷா பகிர்ந்த இன்ஸ்டா ரீல்ஸ் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த ரீல்ஸ் ஏற்கெனவே டிரெண்டிங்கில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. கடற்கரையில் ஒரு பெண் சாமியார் தோற்றத்தில் இருப்பவரிடம், “உங்கள... மேலும் பார்க்க

பிச்சைக்காரன் - 3 படத்தை இயக்கி நடிக்கும் விஜய் ஆண்டனி!

நடிகர் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் - 3 படத்தை இயக்கி நடிப்பதாக அறிவித்துள்ளார். சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் 2016-ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தமி... மேலும் பார்க்க

நாளை (ஜூன் 27) மறுவெளியீடாகும் தடையறத் தாக்க!

நடிகர் அருண் விஜய் நடித்த தடையறத் தாக்க திரைப்படம் நாளை (ஜூன் 27) மறுவெளியீடாகிறது.இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தடையறத் தாக... மேலும் பார்க்க

போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணா கைது!

போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவையும் சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.கொகைன் போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகா் ஸ்ரீகாந்தை நுங்கம்பாக்கம் போலீஸாா் கடந்த திங்கள்கிழமை கைது செய்தனா். விச... மேலும் பார்க்க