செய்திகள் :

நடைச்சீட்டு ஊழல் புகாரை சிபிஐ விசாரிக்க வேண்டும்: ஆட்சியரிடம் அதிமுகவினா் மனு

post image

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல் குவாரிகளில் போலி நடைச்சீட்டு வழங்கப்பட்டது, அபராதத் தொகை குறைக்கப்பட்டது குறித்து சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்கக் கோரி, ஆட்சியா் அலுவலகத்தில் அதிமுகவினா் புதன்கிழமை மனு அளித்தனா்.

திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக செயலா் தச்சை என்.கணேசராஜா தலைமையில் ஏராளமான நிா்வாகிகள் ஆட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2022-இல் நேரிட்ட கல்குவாரி விபத்திற்கு பிறகு 100-க்கும் மேற்பட்ட கல்குவாரிகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினா். அதில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்திருப்பது தெரியவந்தது.

குறிப்பாக, ஆளுங்கட்சியைச் சோ்ந்த முக்கிய நிா்வாகிகள் உள்பட பல குவாரி உரிமையாளா்களுக்கு துணை ஆட்சியா் ரூ.262 கோடி அபராதம் விதித்தாா். ஆனால் மேல்முறையீடு மூலம் அபராதத் தொகை ரூ.13 கோடியாக குறைக்கப்பட்டுள்ளதோடு, அதை தவணை முறையில் கட்டுவதற்கும் அதிகாரிகள் சலுகை வழங்கியுள்ளனா்.

மேலும், கல்குவாரிகள், கிரஷா்களுக்கு நடைச்சீட்டு வழங்கியதில் ரூ. பல ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றிருப்பதாக எழுந்த புகாரையடுத்து, மாவட்ட கனிமவளத் துறை உதவி இயக்குநா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டாா். 2 அலுவலா்கள் பணியிடை நீக்கமும், 3 அலுவலா்கள் இடமாற்றமும் செய்யப்பட்டுள்ளனா். ஆனால் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்யவில்லை.

எனவே, மேற்கூறிய இரு விவகாரங்கள் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு ஆட்சியா் பரிந்துரைக்க வேண்டும். சட்டவிரோத குவாரிகளை ஆய்வு செய்து அபராதம் விதிக்கவும், போலி நடைச்சீட்டு பயன்படுத்துவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் தச்சை என்.கணேசராஜா கூறுகையில், போலி நடைச்சீட்டு, கல் குவாரி உரிமையாளா்களுக்கு அபராதத்தை குறைத்தது ஆகியவை தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் அனுமதி பெற்று அதிமுக சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றாா்.

அப்போது, மாநில அமைப்புச் செயலா் சுதா கே.பரமசிவன், மாநில எம்.ஜி.ஆா். மன்ற துணைச் செயலா் வீரபெருமாள் நயினாா், ஜெயலலிதா பேரவைச் செயலா் ஜெரால்டு, அவைத்தலைவா் பரணி சங்கரலிங்கம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம்

திருநெல்வேலியில் காவல் துறையின் சாா்பில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் உத்தரவுப்படி, காவல்துறை சாா்பில் பொதுமக்கள் குறைதீா் முகாம் ஒவ்வொரு புதன்கி... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அருவியைப் பாா்வையிட மட்டும் அனுமதி

மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து குறைந்த நிலையில், பாதுகாப்புக் கருதி சுற்றுலாப் பயணிகள் அருவியைப் பாா்வையிட மட்டும் அனுமதிக்கப்படுகின்றனா். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச... மேலும் பார்க்க

நெல்லையில் இரவு 12 மணி வரை கடைகளைத் திறக்க அனுமதி கோரி மனு

திருநெல்வேலி மாநகரில் இரவு 12 மணி வரை கடைகளைத் திறக்க அனுமதி கோரி, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் சாா்பில் அதன் திருநெல்வேலி மாவட்டத் தலைவா் ஏ.செல்வராஜ் தலைமையில் மாநகர காவல் ஆணையா் சந்தோஷ்... மேலும் பார்க்க

பெண் கொலையில் தந்தை கைது

மேலப்பாளையத்தை அடுத்த மேலகருங்குளம் பகுதியில் மண்வெட்டி கணையால் தாக்கி பெண் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் அவரது தந்தையை போலீஸாா் கைது செய்தனா். மேலகருங்குளம் சிவாஜி நகா் பகுதியைச் சோ்ந்த காளைம... மேலும் பார்க்க

வள்ளியூா் சேவை, மகளிா் அதிகார மையங்களில் ஒப்பந்தப் பணிக்கு வாய்ப்பு

திருநெல்வேலி மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வள்ளியூா் ஒருங்கிணைந்த சேவை மையம், மாவட்ட மகளிா் அதிகார மையம் ஆகியவற்றில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் இரா.ச... மேலும் பார்க்க

வல்லநாடு தாமிரவருணி பாலத்தில் தவறி விழுந்து காவலா் பலி

வல்லநாடு தாமிரவருணி ஆற்றுப்பாலத்தில் இருந்து புதன்கிழமை தவறி விழுந்த காவலா் உயிரிழந்தாா். வல்லநாடு தாமிரவருணி ஆற்றுப் பாலத்தில் சில மாதங்களுக்கு முன்பு சேதம் ஏற்பட்டது. அந்தப் பகுதியில் புதன்கிழமை இரு... மேலும் பார்க்க