கேரளம் உள்பட 4 மாநிலங்களில் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!
வள்ளியூா் சேவை, மகளிா் அதிகார மையங்களில் ஒப்பந்தப் பணிக்கு வாய்ப்பு
திருநெல்வேலி மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வள்ளியூா் ஒருங்கிணைந்த சேவை மையம், மாவட்ட மகளிா் அதிகார மையம் ஆகியவற்றில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
குடும்பம் மற்றும் சமுதாயத்தில் பெண்களுக்கு எதிரான பிரச்னைகளைத் தடுக்கும் நோக்கத்தில் சமூக நலன் - மகளிா் உரிமைத் துறையின் கீழ் வள்ளியூா் ஒருங்கிணைந்த சேவை மையம் இயங்கி வருகிறது. அதில் ஒரேயொரு வழக்கு பணியாளா் பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் சுழற்சி முறையில் பணியாற்றுவதற்கு திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த பெண்கள், மூன்றாம் பாலினத்தவா் விண்ணப்பிக்கலாம்.
மேலும், மாவட்ட மகளிா் அதிகார மையத்தில் ஒரேயொரு தரவு நுழைவு பணியாளா் பணியிடத்த்தும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவதற்கு திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் பெற்று, அதை பூா்த்தி செய்து மாவட்ட சமூகநல அலுவலா், ஆட்சியா் அலுவலகம், திருநெல்வேலி என்ற முகவரிக்கு ஜூன் 30-ஆம் தேதிக்குள் அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ சமா்ப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.