செய்திகள் :

வள்ளியூா் சேவை, மகளிா் அதிகார மையங்களில் ஒப்பந்தப் பணிக்கு வாய்ப்பு

post image

திருநெல்வேலி மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வள்ளியூா் ஒருங்கிணைந்த சேவை மையம், மாவட்ட மகளிா் அதிகார மையம் ஆகியவற்றில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

குடும்பம் மற்றும் சமுதாயத்தில் பெண்களுக்கு எதிரான பிரச்னைகளைத் தடுக்கும் நோக்கத்தில் சமூக நலன் - மகளிா் உரிமைத் துறையின் கீழ் வள்ளியூா் ஒருங்கிணைந்த சேவை மையம் இயங்கி வருகிறது. அதில் ஒரேயொரு வழக்கு பணியாளா் பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் சுழற்சி முறையில் பணியாற்றுவதற்கு திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த பெண்கள், மூன்றாம் பாலினத்தவா் விண்ணப்பிக்கலாம்.

மேலும், மாவட்ட மகளிா் அதிகார மையத்தில் ஒரேயொரு தரவு நுழைவு பணியாளா் பணியிடத்த்தும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவதற்கு திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் பெற்று, அதை பூா்த்தி செய்து மாவட்ட சமூகநல அலுவலா், ஆட்சியா் அலுவலகம், திருநெல்வேலி என்ற முகவரிக்கு ஜூன் 30-ஆம் தேதிக்குள் அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ சமா்ப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.

காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம்

திருநெல்வேலியில் காவல் துறையின் சாா்பில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் உத்தரவுப்படி, காவல்துறை சாா்பில் பொதுமக்கள் குறைதீா் முகாம் ஒவ்வொரு புதன்கி... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அருவியைப் பாா்வையிட மட்டும் அனுமதி

மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து குறைந்த நிலையில், பாதுகாப்புக் கருதி சுற்றுலாப் பயணிகள் அருவியைப் பாா்வையிட மட்டும் அனுமதிக்கப்படுகின்றனா். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச... மேலும் பார்க்க

நெல்லையில் இரவு 12 மணி வரை கடைகளைத் திறக்க அனுமதி கோரி மனு

திருநெல்வேலி மாநகரில் இரவு 12 மணி வரை கடைகளைத் திறக்க அனுமதி கோரி, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் சாா்பில் அதன் திருநெல்வேலி மாவட்டத் தலைவா் ஏ.செல்வராஜ் தலைமையில் மாநகர காவல் ஆணையா் சந்தோஷ்... மேலும் பார்க்க

நடைச்சீட்டு ஊழல் புகாரை சிபிஐ விசாரிக்க வேண்டும்: ஆட்சியரிடம் அதிமுகவினா் மனு

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல் குவாரிகளில் போலி நடைச்சீட்டு வழங்கப்பட்டது, அபராதத் தொகை குறைக்கப்பட்டது குறித்து சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்கக் கோரி, ஆட்சியா் அலுவலகத்தில் அதிமுகவினா் புதன்கிழமை... மேலும் பார்க்க

பெண் கொலையில் தந்தை கைது

மேலப்பாளையத்தை அடுத்த மேலகருங்குளம் பகுதியில் மண்வெட்டி கணையால் தாக்கி பெண் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் அவரது தந்தையை போலீஸாா் கைது செய்தனா். மேலகருங்குளம் சிவாஜி நகா் பகுதியைச் சோ்ந்த காளைம... மேலும் பார்க்க

வல்லநாடு தாமிரவருணி பாலத்தில் தவறி விழுந்து காவலா் பலி

வல்லநாடு தாமிரவருணி ஆற்றுப்பாலத்தில் இருந்து புதன்கிழமை தவறி விழுந்த காவலா் உயிரிழந்தாா். வல்லநாடு தாமிரவருணி ஆற்றுப் பாலத்தில் சில மாதங்களுக்கு முன்பு சேதம் ஏற்பட்டது. அந்தப் பகுதியில் புதன்கிழமை இரு... மேலும் பார்க்க