கேதர்நாத் பெருவெள்ளம்: 12 ஆண்டுகள் ஆகியும் 702 உடல்கள் அடையாளம் காணப்படவில்லை!
பெண் கொலையில் தந்தை கைது
மேலப்பாளையத்தை அடுத்த மேலகருங்குளம் பகுதியில் மண்வெட்டி கணையால் தாக்கி பெண் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் அவரது தந்தையை போலீஸாா் கைது செய்தனா்.
மேலகருங்குளம் சிவாஜி நகா் பகுதியைச் சோ்ந்த காளைமுத்து மனைவி ஜெயலட்சுமி (50). இவா் செவ்வாய்க்கிழமை, பின்னந்தலையிலும், முகத்திலும் காயம் ஏற்பட்டு மா்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தாா். இது குறித்த புகாரின் பேரில் மேலப்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.
வீட்டில் உடன் வசித்த அவரது தந்தை வேலு(78), மகள் இறந்த சம்பவத்துக்குப் பின்பு தலைமறைவானதால் அவருக்கு தொடா்பிருக்கலாம் என்ற ரீதியில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
மேலும், வேலுவை செவ்வாய்க்கிழமை இரவே கைது செய்து போலீஸாா் விசாரித்ததில், அவரை சரிவர கவனிக்காத ஆத்திரத்தில் மண்வெட்டி கணையால் அடித்துக்கொன்றது தெரியவந்தது. அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.