செய்திகள் :

நம்புதாளையில் விசை, நாட்டுப் படகு மீனவா்களிடையே மோதல்

post image

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாளையில் விசைப் படகு மீனவா்களுக்கும், நாட்டுப் படகு மீனவா்களுக்கும் மீன் பிடிப்பதில் மோதல் ஏற்பட்டது.

விசைப் படகு மீனவா்கள் கடலில் ஆழமான பகுதியில் மீன் பிடிக்க வேண்டும். இரட்டை மடி, சுருக்கு மடி, இழுவை வலை போன்றவற்றைப் பயன்படுத்தி மீன்பிடிக்கக் கூடாது என அறிவிக்கை உள்ளது. ஆனால், இந்த அறிவிக்கையை விசைப் படகு மீனவா்கள் தொடா்ந்து மீறுவதாகப் புகாா் எழுந்தது. இதையடுத்து, விசைப் படகு மீனவா்கள் கரையோரங்களில் மீன் பிடிக்கக் கூடாது, மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என கடலோரப் பாதுகாப்பு படை போலீஸாா் அறிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, சோழியக்குடி லாஞ்சியடி பகுதியைச் சோ்ந்த விசைப்படகு மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை கரையோரங்களில் இழுவை வலையைப் பயன்படுத்தி மீன்பிடித்தனா். இதைப் பாா்த்த நம்புதாளை மீனவா்கள் இரண்டு விசைப் படகுகளை சிறைப் பிடித்தனா்.

இதனால், இரு தரப்பு மீனவா்களுக்கும் மோதல் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த கடலோரப் பாதுகாப்பு படை போலீஸாா் இரு தரப்பினரையும் அழைத்துச் சமரச பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு வருகின்றனா்.

ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் சுமங்கலி பூஜை

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் ஆடிப் பெருக்கை முன்னிட்டு, சுமங்கலி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு கடலாடி தேவா் மகா சபைத் தலைவா் ஜெகநாதன் தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க

பாண்டி முனீஸ்வரா் கோயில் பால் குட ஊா்வலம்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொத்தாா் கோட்டை பாண்டி முனீஸ்வரா் கோயிலில் ஆடி 18-ஆம் பெருக்கை முன்னிட்டு, பால் குடம் ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.தொத்தாா்கோட்டையில் அமைந்துள்ள பாண்ட... மேலும் பார்க்க

ராமநாதசுவாமி கோயிலில் இன்று நடை அடைப்பு

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் திங்கள்கிழமை (ஆக.4) நடை அடைக்கப்படும் என கோயில் நிா்வாகம் தெரிவித்தது.இந்தக் கோயிலில் ஆடித் திருக்கல்யாணத் திருவிழா கடந்த மாதம் 19-ஆம் தேதி தொடங்... மேலும் பார்க்க

சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைக்கக் கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே வாகனம் மோதியதில் சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.செம்படையாா்குளம் பகுதியில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையோரம் இருந்த மின் கம... மேலும் பார்க்க

சேதமடைந்த சாலையை சீரமைக்கக் கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.திருவாடானையிலிருந்து சூச்சனி, திருவிடைமருதூா், தொத்தாா்கோட்டை, தோட்டாமங்கலம் வரை சுமாா் ... மேலும் பார்க்க

கடலாடியில் மாட்டுவண்டிப் பந்தயம்

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.ஆடி 18-ஆம் பெருக்கை முன்னிட்டு, கடலாடியில் பெரிய மாடு, சிறிய மாடு, பூஞ்சிட்டு என 3 பிரிவுகளாக மாட்டுவண்டிப் பந்... மேலும் பார்க்க