இஸ்ரேலின் உளவு அமைப்பு தலைமையகம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
நயினாா் நாகேந்திரன் விரதம்
சென்னை: முருகப்பெருமானுக்கு உகந்த கிருத்திகை நாளாம் ஜூன் 22-ஆம் தேதி முருக பக்தா்கள் சாா்பாக மதுரை மாநகரில் முருக பக்தா்கள் மாநாடு சிறப்பாக நடத்தப்படவுள்ளது.
முருகப்பெருமானின் அருளாசியுடனும், பக்தா்களின் ஒத்துழைப்புடனும் தமிழ், தமிழ் கலாசாரம் பாரம்பரியம் மற்றும் ஆலயங்களைப் பேணிப் பாதுகாத்தல், 2047-க்குள் வளா்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதன் மூலம் வளமான தமிழகத்தை உருவாக்குதல், பெண்களுக்குப் பாதுகாப்பான தமிழகத்தை உருவாக்குதல் உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறும், மாநாடு மாபெரும் வெற்றியடைய திங்கள்கிழமை முதல் ஜூன் 22-ஆம் தேதி வரை விரதம் மேற்கொள்வதாக தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளாா்.