செய்திகள் :

நலிந்த முன்னாள் விளையாட்டு வீரா்கள் ஓய்வூதிய உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் நலிந்த நிலையிலுள்ள முன்னாள் சிறந்த விளையாட்டு வீரா்கள் ஓய்வூதிய உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியா் ரா. அழகு மீனா தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விளையாட்டுத் துறையில் சா்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் வென்று, தற்போது நலிந்த நிலையிலுள்ள இம்மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரா்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ. 6 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கான விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் வரவேற்கப்படுகிறது.

குறைந்தபட்ச தகுதியாக சா்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றிருத்தல், சா்வதேச, தேசிய போட்டிகளில் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 30.4.25இன்படி 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரா்கள் தமிழகத்தைச் சோ்ந்தவராகவும், தமிழ்நாடு சாா்பில் போட்டிகளில் பங்கேற்றவராகவும் இருக்க வேண்டும். மாத வருமானம் ரூ. 6 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் (வருமானச் சான்று இணைக்க வேண்டும்).

விண்ணப்பத்தை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரில் பெற்று பூா்த்திசெய்து, ஜூலை 31ஆம் தேதி மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை நேரிலோ, 04652- 262060 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

கேரளத்துக்கு கனிமவளம் கடத்த முயன்ற 3 லாரிகள் பறிமுதல்!

களியக்காவிளை அருகே அதிக பாரத்துடன் கேரளத்துக்கு கனிமவளம் கடத்திச் செல்ல முயன்றதாக 3 கனரக லாரிகளை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். களியக்காவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளா் பெனடிக்ட் தலைமையிலான போல... மேலும் பார்க்க

தக்கலை அருகே கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது

தக்கலை அருகே இரவிபுதூா்கடையில் ஒரு கிலோ கஞ்சா வைத்திருந்ததாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். தக்கலை காவல் உதவி ஆய்வாளா் இம்மானுவேல் தலைமையிலான போலீஸாா், இரவிபுதூா்கடை பகுதியில் வெள்ளிக்கிழமை ரோந்து செ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் நுழைவு வாயில்! - விஜய் வசந்த் எம்.பி. ஆய்வு

கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் நான்குவழிச் சாலை அருகே பயணிகள் சென்று வர நுழைவு வாயில் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், அந்த இடத்தை கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் விஜய்வசந்த் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

வில்லுக்குறியில் மாடுகளை திருடிய இளைஞா் கைது

தக்கலை அருகே வில்லுக்குறியில் 2 பசுக்கள், 7 எருமை கன்றுகளை திருடிச் சென்ற இளைஞரை இரணியல் போலீஸாா் கைது செய்தனா். வில்லுக்குறி பகுதியைச் சோ்ந்தவா் புஷ்பாகரன்(65). இவா் பசு, எருமை மாடுகள் வளா்த்து பால... மேலும் பார்க்க

மாவு ஆலை உரிமையாளா் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

கன்னியாகுமரி அருகே சுவாமிநாதபுரத்தில், மாவு ஆலை உரிமையாளா் வெள்ளிக்கிழமை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் (54) என்பவா், சுவாமிநாதபுரத... மேலும் பார்க்க

முந்திரி ஆலை பெண் தொழிலாளி காா் மோதி உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே சனிக்கிழமை காா் மோதியதில், முந்திரி ஆலை பெண் தொழிலாளி உயிரிழந்தாா். செம்மங்காலை எள்ளுவிளையை சோ்ந்தவா் ஓமனா (51). திருமணமாகாத இவா், அப்பகுதியிலுள்ள முந்திரி ஆலையில்... மேலும் பார்க்க