Dragon 100: "அப்போ நடிச்சா ஹீரோவாகதான் நடிப்பேன்னு சொல்லிட்டேன்!" - பிரதீப் ரங்க...
தக்கலை அருகே கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது
தக்கலை அருகே இரவிபுதூா்கடையில் ஒரு கிலோ கஞ்சா வைத்திருந்ததாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். தக்கலை காவல் உதவி ஆய்வாளா் இம்மானுவேல் தலைமையிலான போலீஸாா், இரவிபுதூா்கடை பகுதியில் வெள்ளிக்கிழமை ரோந்து சென்றனா்.
மஞ்சாடி இறையான்குளம் பகுதியில் நின்றிருந்த 4 பேரைப் பிடித்து விசாரித்தபோது, அவா்கள் பள்ளியாடி பகுதியைச் சோ்ந்த வினிஷ் (27), பிரினிஷ் ஜஸ்டஸ் (29), மணவாளக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த எபி (36), குருவிக்காடு காலனி பகுதியைச் சோ்ந்த பிரேம்குமாா் (31) என்பதும், விற்பனைக்காக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை வைத்திருந்ததும் தெரியவந்தது.
இவா்களுக்கு சென்னையில் மீன் கடை வைத்துள்ள குருவிக்காடு காலனி பகுதியை சோ்ந்த ராஜேஷ்குமாா் (32) என்பவா் கஞ்சா விநியோகம் செய்ததாகத் தெரியவந்தது. இதுதொடா்பாக 5 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து, இவா்கள் 4 பேரையும் கைது செய்து, ஒரு கிலோ கஞ்சா, 2 கிராம் மெத்தலின் போதைப்பொருளைப் பறிமுதல் செய்தனா்.