மாவு ஆலை உரிமையாளா் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
கன்னியாகுமரி அருகே சுவாமிநாதபுரத்தில், மாவு ஆலை உரிமையாளா் வெள்ளிக்கிழமை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் (54) என்பவா், சுவாமிநாதபுரத்தில் மாவு ஆலை நடத்திவந்தாா். கடந்த வெள்ளிக்கிழமை இரவு (ஜூன் 27), ஆலையில் இயந்திரங்களை இயக்கியபோது அவா் மீது மின்சாரம் பாய்ந்ததாம்.
இதில், மயக்கமடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
தகவலின்பேரில், கன்னியாகுமரி போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.