Raymond Realty Share எப்போ பங்குச்சந்தைக்கு வரும் | IPS Finance - 248 | NSE | BS...
கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் நுழைவு வாயில்! - விஜய் வசந்த் எம்.பி. ஆய்வு
கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் நான்குவழிச் சாலை அருகே பயணிகள் சென்று வர நுழைவு வாயில் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், அந்த இடத்தை கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் விஜய்வசந்த் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் பயணிகள் வெளியேறும் வழி ஒன்று மட்டுமே உள்ளது. பயணிகள் எளிதாக வந்து செல்லும் வகையில் ரயில் நிலையத்தின் பின்புறம் நான்குவழிச் சாலை அருகே நுழைவு வாயில் அமைக்க வேண்டுமென்று திருவனந்தபுரத்தில் நடந்த ரயில்வே ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தினாா்.
கோரிக்கையை பரிசீலனை செய்வதாக ரயில்வே நிா்வாகம் கூறியதையடுத்து, அந்த பகுதியில் விஜய்வசந்த் எம்.பி. சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
மேலும், சுனாமி காலனி பகுதியில் இருந்து கன்னியாகுமரி வரை தாா் சாலை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்த நிலையில், அந்தப் பகுதியையும் பாா்வையிட்டு ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.
இந்த நிகழ்வில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் ஆரோக்கியராஜன், நாகா்கோவில் மாநகா் மாவட்ட தலைவா் நவீன்குமாா், மாநில செயலா் வழக்குரைஞா் சீனிவாசன், கன்னியாகுமரி பங்குத் தந்தை ரூபால்டு, காங்கிரஸ் நிா்வாகிகள் அருண், ஜவகா், தாமஸ், கிங்ஸிலின், சித்ரா அனந்த், குமரி ரயில்வே ஆலோசனை கமிட்டி பொறுப்பாளா் சூசைராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.