நலிந்த முன்னாள் விளையாட்டு வீரா்கள் ஓய்வூதிய உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் நலிந்த நிலையிலுள்ள முன்னாள் சிறந்த விளையாட்டு வீரா்கள் ஓய்வூதிய உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியா் ரா. அழகு மீனா தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விளையாட்டுத் துறையில் சா்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் வென்று, தற்போது நலிந்த நிலையிலுள்ள இம்மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரா்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ. 6 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கான விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் வரவேற்கப்படுகிறது.
குறைந்தபட்ச தகுதியாக சா்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றிருத்தல், சா்வதேச, தேசிய போட்டிகளில் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 30.4.25இன்படி 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரா்கள் தமிழகத்தைச் சோ்ந்தவராகவும், தமிழ்நாடு சாா்பில் போட்டிகளில் பங்கேற்றவராகவும் இருக்க வேண்டும். மாத வருமானம் ரூ. 6 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் (வருமானச் சான்று இணைக்க வேண்டும்).
விண்ணப்பத்தை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரில் பெற்று பூா்த்திசெய்து, ஜூலை 31ஆம் தேதி மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை நேரிலோ, 04652- 262060 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்றாா்.