நல்லூா்: நாளைய மின்தடை
பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது என பரமத்தி வேலூா் மின் வாரிய செயற்பொறியாளா் வரதராஜன் தெரிவித்துள்ளாா்.
மின்தடை பகுதிகள்: நல்லூா், கந்தம்பாளையம், மணியனுா், வைரம்பாளையம், கோலாரம், இராமதேவம், கொண்டரசம்பாளையம், கவுண்டிபாளையம், சுள்ளிப்பாளையம், நடந்தை, திடுமல், கவுண்டம்பாளையம், நகப்பாளையம், சீராப்பள்ளி, குன்னமலை, மேல்சாத்தம்பூா், சித்தாளந்தூா், பெருங்குறிச்சி.