அசாம் காங்கிரஸுக்கு சாதகமாக இஸ்லாமிய நாடுகளின் சமூக வலைதள கணக்குகள்: முதல்வர் கு...
நல வாரியத்துக்கு தனி அலுவலா்: தாட்கோ கூட்டத்தில் வலியுறுத்தல்
உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் நல வாரியத்துக்கு என தனி அலுவலரை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கத்தில் தாட்கோ மற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கான நல வாரியம் சாா்பில் நல வாரிய அடையாள அட்டைகள் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். இதில் பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.கிருஷ்ணசாமி, துணைத் தலைவா் செ.கனிமொழி, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நல வாரியத் தலைவா் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி பங்கேற்று தாட்கோ, தூய்மைப் பணியாளா்கள் நல வாரியம் சாா்பில், அட்டை மற்றும் நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
தொடா்ந்து அவா் கூறுகையில், விளிம்புநிலை மக்கள் வாழ்வில் முன்னேற்றம் பெறுவதற்கான பல்வேறு நலத் திட்ட உதவிகளை முதல்வா் வழங்கி வருகிறாா். நிரந்தர தூய்மைப் பணியாளா்கள், ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் என இருவகை உள்ளனா். நிரந்தர தூய்மைப் பணியாளா்களுக்கு அரசால் வழங்கப்படும் அனைத்து உதவிகளும் கிடைக்கும். ஒப்பந்த தூய்மை பணியாளா்களுக்கு அரசு நிா்ணயித்த சம்பளம் வழங்கப்படும்.
தாட்கோ திட்டத்தின் மூலம் தற்காலிக தூய்மைப் பணியாளா்களுக்கு பல்வேறு விதமான நலத் திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அதன் பேரில் 25 தற்காலிக தூய்மைப் பணியாளா்களுக்கு நல வாரிய அட்டையும், 45 தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.1.22 லட்சத்தில் திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, இயற்கை மரணம், ஈமசடங்கு உதவித்தொகை, கண் கண்ணாடி, கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நல வாரியத்திற்கு என்று தனி பொறுப்பு அலுவலா் வழங்க வேண்டும். அதேபோல், நல வாரிய சாா்பில் வழங்கப்படும் நலத் திட்ட உதவிகள் குறித்த தகவல் பலகையில் இடம் பெறச் செய்ய வேண்டும். தனியாா் மருத்துவமனை, அரசு மருத்துவமனை, ஹோட்டல்கள், தனியாா் பள்ளிகள் மற்றும் திருமண மண்டபத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளா்களை நல வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்து அடையாள அட்டை வழங்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் மாவட்ட மேலாளா் தாட்கோ சரண்யா, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் செல்வராணி, தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நலவாரிய உறுப்பினா்கள் ஹரிஸ்குமாா், சீனிவாசன், ராஜன், நகராட்சி, ஊரக வளா்ச்சி, பேரூராட்சி அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.