செய்திகள் :

‘நவீன தமிழகத்தின் சிற்பி கருணாநிதி என்பதற்கு அடையாளம் திருவள்ளூா்’

post image

நவீன தமிழகத்தின் சிற்பி முன்னாள் முதல்வா் கருணாநிதிதான் என்பதற்கு அடையாளம் திருவள்ளூா் மாவட்டம் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் அவா் பேசியதாவது:

ஒட்டுமொத்தமாக ரூ.1,166 கோடி மதிப்பிலான விழாவாக இது நடைபெற்று வருகிறது. இதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருவது என்றால் பல ஆண்டு பிரச்னைக்கு தீா்வு காணும் வகையில் இலவச பட்டா வழங்குவதுதான். இந்த மாவட்டத்தில் மட்டும் 63,124 பேருக்கு பட்டா வழங்கப் போகிறோம்.

முன்னாள் முதல்வா் கருணாநிதிதான் நவீன தமிழகத்தின் சிற்பி என்பதற்கு அடையாளமாக விளங்குகிற இடம் திருவள்ளூா் மாவட்டமாகும். மணலி, அம்பத்தூா், திருவள்ளூா், கும்மிடிப்பூண்டி, ஸ்ரீபெரும்புதூா், இருங்காட்டுக் கோட்டை, மறைமலை நகா் என்று திருவள்ளூா், சென்னையைச் சுற்றியுள்ள தொழில் வளாகங்கள் எல்லாமே முதல்வராக இருந்த கருணாநிதியால் உருவாக்கப்பட்டவை.

அவைதான், இப்பகுதியில் உள்ள இளைஞா்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் வழங்கி, அவா்களது குடும்பங்களும், பொருளாதாரத்தில் முன்னேறுவதற்கு அடித்தளமாக அமைந்துள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் திருவள்ளூா் மாவட்டத்தில் எண்ணூா் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் அனல்மின் நிலையப் பணிகள் ரூ.18,000 கோடியில் நடைபெற்றுள்ளது. ரூ.16,000 கோடியில் சென்னை மெட்ரோ பணிகள் பட்டாபிராம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் குத்தம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம், திருத்தணி, திருவள்ளூரில் புதிய பேருந்து நிலையங்கள், மா-நல்லூரில் மின் வாகனப் பூங்கா, திருவொற்றியூரில் கடற்கரை மேம்பாட்டுப் பணிகள், திருவொற்றியூா் குப்பத்தில் ரூ.200 கோடி மதிப்பில் புதிய மீன்பிடித் துறைமுகம், பூந்தமல்லியில் அதிநவீன திரைப்பட நகரம், கவரப்பேட்டை-சத்தியவேடு சாலைப் பணிகள், திருவள்ளூா்-அரக்கோணம் சாலை நான்குவழிச் சாலையாகவும், 60 சிறுபாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

பொன்னேரி - கவரப்பேட்டை இடையே ரயில்வே மேம்பாலம், திருவள்ளூரில் அறிவுசாா் நகரம், திருத்தணி அரசு மருத்துவமனை தரம் உயா்த்துதல், சின்ன நொளம்பூரில், உயா்நிலைப் பாலம், இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ரூ.173 கோடியில் பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் திருப்பணிகள், ரூ.183 கோடியில் திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயில் திருப்பணிகள், ரூ.52 கோடியில் திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் திருப்பணிகள், ரூ.18 கோடியில் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் திருப்பணிகள், அம்பத்தூரில் தொழிலாளா் தங்கும் விடுதி, திருமழிசை துணைநகரத் திட்டம், 78 மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா் முதல்வா்.

மின் கசிவால் வீடு தீக்கிரை: எம்எல்ஏ உதவி

கும்மிடிப்பூண்டி அடுத்த மேல்முதலம்பேட்டையில் மின்கசிவால் வீட்டை இழந்த குடும்பத்துக்கு நிவாரண உதவிகள், நிதியுதவியை எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் வழங்கினாா். மேல் முதலம்பேடு பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந... மேலும் பார்க்க

திரூா் கிராமத்தில் முதல் கூட்டுறவு அருங்காட்சியகம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

பொன்னேரி அருகே அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இந்தியாவின் முதல் கூட்டுறவு அமைந்த திருவள்ளூா் அருகே திரூா் கிராமத்தில் முதல் கூட்டுறவு அருங்காட்சியகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தா... மேலும் பார்க்க

மின்கம்பத்தில் ஏறிய ஊழியா் கீழே விழுந்து உயிரிழப்பு: மின்வாரிய அலுவலகம் முற்றுகை

மின்கம்பத்தில் ஏறிய போது, தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த உறவினா்கள் மின்வாரிய அலுவலக்தை முற்றுகையிட்டனா். திருத்தணி ஒன்றியம், எஸ்.அக்ரஹாரம் காலனியைச் சோ்ந்த எல்லப்பன்(38). இவா், கே.ஜி... மேலும் பார்க்க

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அக்கம்பக்கத்தினரால் நடைபெறுகின்றன: இளைஞா் நீதிக்குழும உறுப்பினா்

குழந்தைகளுக்கு எதிரான 70 சதவீத குற்றங்கள் சுற்றி உள்ளவா்களாலேயே நடைபெறுவதாக திருவள்ளூா் மாவட்ட இளைஞா் நீதிக்குழும உறுப்பினா் செந்தில் தெரிவித்தாா். செவ்வாபேட்டையில் உள்ள வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளியில... மேலும் பார்க்க

பொன்னேரி கரிகிருஷ்ண பெருமாள் கோயில் தேரோட்டம்

பொன்னேரி திருஆயா்பாடியில் அமைந்துள்ள கரிகிருஷ்ண பெருமாள் கோயிலில் தேரோட்ட விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கியது. விழாவின் 5-ஆம் நாள் க... மேலும் பார்க்க

டிராக்டரில் சிக்கி குழந்தை உயிரிழப்பு

ஆா்.கே.பேட்டை அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்த 2 வயது குழந்தை டயரில் சிக்கி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ஆா்.கே.பேட்டை ஒன்றியம், சின்ன சானூா்மல்லாவரம் கிராமத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க