செய்திகள் :

நவோனியா திருட்டுக் கும்பலின் உத்தி என்ன? செல்போன் திருட்டில் கைதேர்ந்தவர்கள்!!

post image

பேருந்து அல்லது ரயிலில் ஏறும்போது, கூட்ட நெரிசலில், ஒரு சில வினாடிகளில் செல்போன் திருடப்படும். திருட்டுப் போனது பற்றி பொருளை பறிகொடுத்தவருக்கே தெரியாது. திருடியவரைப் பிடித்தாலும் அவரிடம் எதுவும் இருக்காது. இதுதான் நவோனியா கும்பலின் உத்தி.

சென்னையில் நுழைந்திருக்கும் இந்த நவோனியா திருட்டுக் கும்பலைச் சேர்ந்தவர்கள், சென்னை காவல்துறை, ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் ரயில்வே காவல்துறையினர் இணைந்து கண்காணித்து வருகிறார்கள். மக்களுக்கும் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

கூட்டமாக இருக்கும் ரயில் நிலையம், பேருந்து நிலையம், சந்தைப் பகுதிகளுக்கு வருபவர்கள் கவனமாக இருக்குமாறும் காவல்துறை எச்சரித்துள்ளது.

இவர்கள் அதிக பயிற்சி எடுத்து, கூட்டமான இடங்களில் திருடுவதில் கைதேர்ந்தவர்கள் என்றும், பொருள்கள் திருடும்போது அதனை கைக்குட்டை போன்றவற்றை வைத்து மறைப்பதையும் வழக்கமாகக் கொண்டவர்கள் என்று காவல்துறை கூறுகிறது.

மேற்கு வங்கம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்த இவர்கள், ஒரு சிறு குழுவாக ஓரிடத்துக்கு வந்து தனித்தனியாகப் பிரிந்துகொள்வார்கள்.

பிறகு, யாரிடமிருந்து திருடப்போகிறோம் என்று முடிவெடுத்து,விட்டு, ஒருவர் அவரை திசைதிருப்புவார், மற்றொருவர் அவர் அருகில் சென்று கைகுட்டையை வைத்து திருடும்போது யாரும் பார்க்காத வகையில் வைத்துக்கொண்டு செல்போனை திருடுவார். செல்போனை திருடியதும் அருகில் இருக்கும் மற்றொருவருக்கு அதைக் கொடுத்துவிடுவார். செல்போனை வாங்கியவர் அங்கிருந்து சில வினாடிகளில் மறைந்துவிடுவார். சில வேளைகளில் சிறார்கள் கூட இதில் ஈடுபடுவார்கள்.

மூன்று அல்லது நான்கு பேர்களாக வருவார்கள். யாராவது செல்போனை திருடிவிட்டதாகக் கூச்சல் போட்டால், அவர்களில் சிலரே, திருடரைத் துரத்துவது போல அங்கிருந்து ஓடுவார்கள். யாரும் திரும்பி வர மாட்டார்கள். போனது போனதுதான்.

இவர்கள் பற்றி காவல்துறை கூறும்போது, ஒரு வாரம்தான் அதிகபட்சம் இவர்கள் ஒரு நகரில் இருப்பார்கள். முடிந்த அளவுக்கு திருடிவிட்டு மற்றொரு நகருக்குச் சென்றுவிடுவார்கள். ஒரு நகரிலிருந்து புறப்பட்டுவிட்டால், அவர்கள் கொள்ளையடித்ததை மீட்பதோ, அவர்களை அடையாளம் காண்பதோ இயலாது.

சென்னை, தில்லி, விஜயவாடா, பெங்களூரு போன்ற பெரு நகரங்களே இலக்கு. எனவே, இதுபோன்ற திருடர்களிடமிருந்து மக்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், கூட்டமான பகுதிகளுக்கு வரும்போது விழிப்புணர்வுடன் இருங்கள். ஆண்கள் பாக்கெட்டில் செல்போன் வைக்க வேண்டாம்.

இந்த கூட்டத்தைச் சேர்ந்தவர்களின் புகைப்படங்கள் மக்கள் கூடும் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்புப் படையினர் கூறுகிறார்கள்.

Even if the thief is caught, he will have nothing. This is the strategy of the Navonia gang.

இதையும் படிக்க... சென்னைக்குள் புகுந்த மிகப் பயங்கர நவோனியா திருட்டுக் கும்பல்! எச்சரிக்கை!!

ஜொ்மனி பல்கலை. தமிழ் ஓலைச் சுவடி: சென்னை நூலகத்தில் ஒப்படைத்தாா் முதல்வா்

ஜொ்மனியில் உள்ள பல்கலைக்கழகத்தில் தன்னிடம் வழங்கப்பட்ட பழங்கால ஓலைச் சுவடிகளை சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒப்படைத்தாா். தலைமைச் செயலகத்தில் நூலகப் பொறுப்பாளா்களிட... மேலும் பார்க்க

தேசிய நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியா்களுக்கு ஆளுநா் பாராட்டு

தேசிய நல்லாசிரியா் விருது பெற்ற தமிழகத்தைச் சோ்ந்த இரு ஆசிரியா்களை ஆளுநா் ஆா்.என்.ரவி, புதன்கிழமை அழைத்துப் பாராட்டினாா். நிகழாண்டு ஆசிரியா் தினத்தையொட்டி சென்னை மயிலாப்பூா் பி.எஸ்.சீனியா் செகண்டரி ப... மேலும் பார்க்க

இளையராஜாவுக்கு பாராட்டு விழா: முதல்வா் பெருமிதம்

இசையமைப்பாளா் இளையராஜாவுக்கான பாராட்டு விழா, அவரது ரசிகா்களுக்குமானது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். இது குறித்து, எக்ஸ் தளத்தில் அவா் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: ராஜாவைத் தாலாட்டும் த... மேலும் பார்க்க

இன்று 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்பட 4 மாவட்டங்களில் வியாழக்கிழமை (செப்.11) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: த... மேலும் பார்க்க

ராமேசுவரம்- காசி ஆன்மிகப் பயணத்துக்கு விண்ணப்பிக்கலாம்: அமைச்சா் சேகா்பாபு

ராமேசுவரம்- காசி கட்டணமில்லா ஆன்மிகப் பயணத்துக்கு விண்ணப்பிக்கலாம் என அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராமேசுவரம் ர... மேலும் பார்க்க

வேளாண் விளைபொருள் மதிப்புக்கூட்டல் மையம் அமைக்க மானியம்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

வேளாண் விளைபொருள்களுக்கான மதிப்புக்கூட்டும் மையங்கள் அமைக்க அதிகபட்சமாக ரூ.1.50 கோடி வரை மானியம் வழங்கவுள்ளதாக வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா். இதுக... மேலும் பார்க்க