செய்திகள் :

நஸ்ரியாவுக்கு என்ன ஆனது? அறிக்கையால் ரசிகர்கள் குழப்பம்!

post image

நீண்ட நாள்களாக பொதுவெளியில் வராதது குறித்து நடிகை நஸ்ரியா விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ், மலையாளம் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நஸ்ரியா, பிரபல நடிகர் ஃபஹத் ஃபாசிலை திருமணம் செய்துகொண்டார்.

அதன்பிறகு நீண்ட நாள்களாக திரைப்படத்தில் நடிக்காமல் இருந்த நஸ்ரியா, நானியின் அடடே சுந்தரா படத்தில் நாயகியாக நடித்திருந்தார். தொடர்ந்து, ஃபாசில் ஜோசப் நடிப்பில் வெளியான ’சூட்சம தர்ஷினி’ படத்தில் நாயகியாக நடித்து நல்ல விமர்சனங்களைப் பெற்றார் நஸ்ரியா.

இந்த நிலையில், நீண்ட நாள்களாக பொது நிகழ்வுகளில் கலந்துகொள்ளாதது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் நஸ்ரியா விளக்கம் அளித்துள்ளார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

“நீங்கள் அனைவரும் நலமுடன் இருக்கிறீர்கள் என நம்புகிறேன். நான் சில நாள்களாக பொதுவெளியில் வராதது தொடர்பாக பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

கடந்த சில மாதங்களாக மன ரீதியிலான பிரச்னைகள் மற்றும் தனிப்பட்ட சவால்களுடன் நான் போராடி வருகிறேன். எனது 30-வது பிறந்த நாள், புத்தாண்டு மற்றும் சூட்சம தர்ஷினி படத்தின் வெற்றிவிழா மற்றும் பல முக்கியமான தருணங்களை கொண்டாடுவதை தவறவிட்டேன்.

நான் பொதுவெளியில் வராதது தொடர்பாக விளக்கம் அளிக்காததற்கும், அழைப்புகளை எடுக்காததற்கும் செய்திகளுக்கு பதிலளிக்காததற்கும் அனைத்து நண்பர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். சிரமத்தை ஏற்படுத்தியதற்கு வருந்துகிறேன். நான் முழுமையாக முடங்கியிருந்தேன்.

பணி நிமத்தமாக என்னைத் தொடர்புகொள்ள முயற்சித்த சக ஊழியர்கள் அனைவரிடமும் மன்னிப்புகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னால் ஏற்பட்ட இடையூறுகளுக்கு நான் வருந்துகிறேன்.

சிறந்த நடிகருக்கான கேரள திரைப்பட விமர்சகர்கள் விருது எனக்கு கிடைத்ததைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அனைத்து அங்கீகாரத்திற்கும் மிக்க நன்றி மற்றும் சக வெற்றியாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.

இந்த கடினமான பயணத்தில் நாளுக்குநாள் குணமடைந்து வருகிறேன். உங்கள் புரிதலையும் ஆதரவையும் நான் பாராட்டுகிறேன். முழுமையாக மீள இன்னும் சில நாள்கள் ஆகலாம். ஆனால், மீள்வதற்கான பாதையில் இருக்கிறேன் என்பதை உறுதி செய்கிறேன்.

உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். விரைவில் மீண்டும் இணைகிறேன். உங்களின் எல்லையில்லா ஆதரவுக்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மன ரீதியிலான பிரச்னை என்று குறிப்பிட்டுள்ள நஸ்ரியா, என்ன பிரச்னை என்று தெளிவாக குறிப்பிடாததால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

டப்பிங் பணிகளில் ஷ்ருதி ஹாசன்! கூலி படத்திற்காகவா?

நடிகை ஷ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டா பக்கத்தில் டப்பிங் பணிகளில் இருப்பதாகக் கூறியுள்ளார். ஆனால், அது எந்தப் படத்துக்கு என்று தெளிவாக குறிப்பிடவில்லை. நடிகர் கமல்ஹாசனின் மகளான ஷ்ருதி தமிழ்ப் படங்களைவிட தெல... மேலும் பார்க்க

திருமணம் செய்வதாகக் கூறி துணை நடிகையிடம் மோசடி: காதல் சுகுமாா் மீது வழக்குப்பதிவு!

திருமணம் செய்து கொள்வதாக துணை நடிகையிடம் நகை, பணத்தை பெற்று மோசடி செய்ததாக நகைச்சுவை நடிகா் சுகுமாா் மீது போலீஸாா் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனா். நடிகா் பரத் நடித்த காதல் திரைப்படத்தில் நகைச்ச... மேலும் பார்க்க

இறுதிச்சுற்றில் அல்கராஸ் - ரூன் பலப்பரீட்சை

ஸ்பெயினில் நடைபெறும் பாா்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், உள்நாட்டு நட்சத்திரம் காா்லோஸ் அல்கராஸ் - டென்மாா்க்கின் ஹோல்கா் ரூன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றனா். முன்... மேலும் பார்க்க

வைஷாலிக்கு முதல் வெற்றி

மகாராஷ்டிரத்தில் நடைபெறும் ஃபிடே மகளிா் கிராண்ட் ப்ரீ செஸ் போட்டியின் 5-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆா்.வைஷாலி வெற்றி பெற்றாா்.இந்தச் சுற்றில் அவா் மங்கோலியாவின் பக்துயாக் முங்குந்துலை வீழ்த்தினாா். இதன... மேலும் பார்க்க

ரேப்பிட் ஃபயா்: இந்தியா்களுக்கு ஏமாற்றம்

பெருவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 25 மீட்டா் ரேப்பிட் ஃபயா் பிஸ்டல் பிரிவில் இந்தியா்கள் மூவா் தகுதிச்சுற்றுடன் வெளியேறி ஏமாற்றத்தை சந்தித்தனா்.இப்பிரிவில் களம் கண்ட அனிஷ் ... மேலும் பார்க்க

திருப்பதியில் கயாது லோஹர் சுவாமி தரிசனம்!

நடிகை கயாது லோஹர் கயாது திருமலையிலுள்ள ஏழுமலையான் திருக்கோயிலிலியில் வழிபாடு நடத்தியுள்ளார்.பாரம்பரிய உடையணிந்து திருமலைக்கு வருகை தந்திருந்த கயாது லோஹருடன் அங்கிருந்த பக்தர்கள் பலர் செல்ஃபி புகைப்படம... மேலும் பார்க்க