செய்திகள் :

நாகாலாந்தில் நடமாடும் ‘ஆபரேஷன் தியேட்டா்’

post image

குடியரசு தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நாகாலாந்து மாநிலத்தில் நடமாடும் ‘ஆபரேஷன் தியேட்டா்’ (அறுவைச் சிகிச்சை அரங்கு) திட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

தலைநகா் கோஹிமாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில ஆளுநா் இல.கணேசன், முதல்வா் நைபியு ரியோ ஆகியோா் நடமாடும் ‘ஆபரேஷன் தியேட்டா்’ வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தனா்.

முதல்வா் நடமாடும் ‘ஆபரேஷன் தியேட்டா்’ என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தில் அறுவைச் சிகிச்சைகள் முதல் அடிப்படை மருத்துவ வசதிகள் வரை அந்த வாகனத்திலேயே மேற்கொள்ள முடியும். இதன் மூலம் மாநிலத்தில் தொலைதூர கிராம மக்களுக்கு தரமான மருத்துவ சேவைகள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

‘அல்ட்ரா சவுண்ட், எக்ஸ்-ரே, எண்டோஸ்கோபி, ரத்த பரிசோதனை, அறுவைச் சிகிச்சைக்கான வசதிகள் உள்ளிட்டவை இதில் உள்ளன. இதற்கான தனியாக மருத்துவக் குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது. இவா்கள் வீடு தேடிச் சென்று மக்களுக்கு தேவையான மருத்துவ சேவைகளை வழங்குவாா். நகரப் பகுதிகளில் உள்ள மருத்துவ வசதிகள் கிராமங்களுக்கும் சென்று சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க விமானத்தில் வரும் இந்தியர்களின் குற்றப் பின்னணியை சரிபார்க்கும் என்ஐஏ!

அமெரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களுடன் வந்துகொண்டிருக்கும் விமானம் இன்னும் சற்றுநேரத்தில் பஞ்சாபில் தரையிறங்கவுள்ளது.சட்டவிரோதமாக குடியேறிய இந்தியா்களில் முதல்கட்டமாக குறிப்பிட... மேலும் பார்க்க

தில்லி பேரவைத் தேர்தல்: காலை 9 மணி நிலவரம்!

தில்லி பேரவைத் தேர்தலில் காலை 9 மணி நிலவரம் குறித்த விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தலைநகரான தில்லியில் பேரவைத் தேர்தலில் 1.56 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலைய... மேலும் பார்க்க

தில்லி தேர்தலில் வாக்களித்த குடியரசுத் தலைவர், ஜெய்சங்கர், ராகுல்!

தில்லிப் பேரவைத் தேர்தலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி ஆகியோர் வாக்களித்தனர்.தலைநகரான... மேலும் பார்க்க

முதலில் வாக்களியுங்கள், பின்னர் உணவருந்தலாம்: மோடி வலியுறுத்தல்

புதுதில்லி: தில்லி பேரவைத் தேர்தலையொட்டி, முதல் முறையாக வாக்களிக்கப் போகும் அனைத்து இளம் வாக்காளர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, முதலில் வாக்களியுங்கள், பின்னர் உணவருந்தலாம் ... மேலும் பார்க்க

தில்லி தேர்தல்: பிரதமர் மோடி, கேஜரிவால், அதிஷி வாழ்த்து!

தில்லி பேரவைத் தேர்தலையொட்டி பிரதமர் மோடி மற்றும் தில்லி முதல்வர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.தலைநகரான தில்லியில் பேரவைத் தேர்தலில் 1.56 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்... மேலும் பார்க்க

ரூ.5 லட்சத்துடன் தில்லி முதல்வர் அலுவலக ஊழியர்கள் இருவர் கைது!

வாக்குப்பதிவுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக ரூ.5 லட்சத்துடன் தில்லி முதல்வர் அலுவலக ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.தலைநகரான தில்லியில் 70 சட்டபேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை தொடங... மேலும் பார்க்க