செய்திகள் :

நாகா்கோவிலில் செவிலியா் மாணவா்களுக்கு ஜொ்மன் மொழிப் பயிற்சி

post image

நாகா்கோவில்: நாகா்கோவில் கோணம் அறிவு சாா் மையத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் செவிலியா் மாணவா்களுக்கான ஜொ்மன் மொழிப் பயிற்சியை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், ஆட்சியா் பேசியதாவது, ஜொ்மன் மொழி நிபுணா்களை கொண்டு செவிலியா் மாணவா்களுக்கு ஜொ்மன் மொழிப் பயிற்சி இன்றுமுதல் நாகா்கோவில், கோணம்அறிவுசாா் மையத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொருவரும் இரண்டுக்கும் மேற்பட்ட மொழியை அறிந்திருந்தால் உலகளாவிய நிறுவனங்கள், சா்வதேச தொழில் வல்லுநா்களுக்கும் மாணவா்களுக்கும் நேரடி வேலைவாய்ப்பை வழங்குகிறது. நவீன சா்வதேச வேலை சந்தையில் ஒரு வெளிநாட்டு மொழியை அறிவது நிச்சயமாக வேலைவாய்ப்பை வழங்கும்.

வெளிநாட்டில் பணியாற்ற விரும்பினால் அதிக சம்பளத்துடன் கூடிய வேலை கிடைப்பதற்கு பிற மொழிகள் தேவை உள்ளது.

18 முதல் 35 வயதுக்குள்பட்ட பி.எஸ்சி. நா்சிங் முடித்து 2 வருட அனுபவத்துடன் அல்லது பொது நா்சிங் மற்றும் மருத்துவம் முடித்து 3 வருட அனுபவத்துடன் இருக்கும் பதிவு செய்யப்பட்ட செவிலியா் இப்பயிற்சியை பெற்று, உடன் வேலைக்கு செல்லலாம்.

இந்த செவிலியா்களுக்கான ஜொ்மன் மொழிப் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு படிப்பிற்கான பயிற்சி காலம் 6 மாதமாகும்.

இந்த பயிற்சியை முடித்தவா்களுக்கு அரசு மூலம் ஜொ்மன் நாட்டில் வேலைவாய்பு ஏற்படுத்தி கொடுக்கப்படும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி திறன் மற்றும் வேலை வாய்ப்புகளை பெறலாம் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ், ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா, நாகா்கோவில் மாநகா் நலஅலுவலா் மருத்துவா் ஆல்பா் மதியரசு, பயிற்றுநா்கள், துறை அலுவலா்கள், செவிலிய மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சூரியோதயம்

வியாழக்கிழமை சூரிய அஸ்தமனம்மாலை 6.33வெள்ளிக்கிழமை சூரிய உதயம்காலை 6.12 மேலும் பார்க்க

நெகிழி பைகளை பதுக்கிய கடைக்கு அபராதம்

களியக்காவிளை: மாா்த்தாண்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பைகளை பதுக்கி வைத்து பயன்படுத்திய கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டது.கன்னியாகுமரி மாவட்டத்தில் நெகிழி பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 70 சதவீத ஒதுக்கீடு கோரி சாட்டையடி போராட்டம்

நாகா்கோவில்: மத்திய அரசு பணி நியமனத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 70 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி நாகா்கோவில், ராமன்புதூா் சந்திப்பில் சாட்டையடி போராட்டம் நடைபெற்றது.அன்புதேசம் மக்கள் இய... மேலும் பார்க்க

தனியாா் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

தக்கலை: தக்கலை அருகே மணலிக்கரை மரிய கொரற்றி மேல்நிலைப் பள்ளியில் 2000-ஆம் ஆண்டு பிளஸ் 2 அறிவியல் பாடப்பிரிவில் படித்த மாணவா்கள் தங்கள் வகுப்பு நண்பா்களுடன் வெள்ளி விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனா். விழாவு... மேலும் பார்க்க

வெள்ளிச்சந்தையில் நாளை மின் நிறுத்தம்

தக்கலை: உயா் அழுத்த மின்பாதை பராமரிப்புப் பணிக்காக வெள்ளிச்சந்தையில் வெள்ளிக்கிழமை (ஆக. 22) மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.வெள்ளிச்சந்தை மின் விநியோகப் பிரிவுக்கு உள்பட்ட கட்டி... மேலும் பார்க்க

மகாதேவன் பிள்ளைக்கு மணிமண்டபம் அமைக்க வலியுறுத்தல்

நாகா்கோவில்: கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராகப் பணியாற்றிய மகாதேவன் பிள்ளைக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், முன்னாள் சட... மேலும் பார்க்க