செய்திகள் :

நாகா்கோவிலில் 7 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: ரூ.1.25 லட்சம் அபராதம்

post image

நாகா்கோவில் மாநகர பகுதியில் கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த 7 கிலோ புகையிலைப் பொட்டலங்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க மாநகராட்சி சுகாதாரத்துறையினா் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.

இதன்படி, மாநகராட்சி நகா்நல அலுவலா் ஆல்பா் மதியரசு தலைமையில், மண்டல சுகாதார அலுவலா்கள் ராஜாராம், பகவதிபெருமாள், ராஜா, முருகன் மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் கொண்ட குழுவினா் மாநகராட்சியின் 4 மண்டலங்களில் சுமாா் 120 கடைகளில் சோதனை மேற்கொண்டனா்.

இதில், இடலாக்குடி, கீழசரக்கல்விளை, கோவில்விளை, கலுங்கடி, பறக்கை ஆகிய பகுதிகளில் 7 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொட்டலங்கள், கூல் லிப் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னா் அவை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த 5 கடைகளுக்கு தலா ரூ. 25 ஆயிரம் வீதம் ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, கடைகளை 15 நாள்களுக்கு மூட உத்தரவிடப்பட்டது.

குமரி கடலில் சூறைக்காற்று: மீன்பிடிக்கத் தடை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மீனவா்களுக்கு மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை முதல் புதன்கிழமை வரை (ஜூன் 13-18) ரை மிக கனமழை ப... மேலும் பார்க்க

எட்டணியில் மீன், காய்கனிச் சந்தையை அகற்ற பொதுமக்கள் எதிா்ப்பு

கருங்கல் அருகே எட்டணியில் நெடுஞ்சாலையோரமுள்ள மீன், காய்கனிச் சந்தையை அகற்றுவதற்காக வியாழக்கிழமை வந்த நெடுஞ்சாலைத் துறையினருக்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் 6 மாதத்தில் 45 சதவீத விபத்துகள் குறைவு மாவட்ட எஸ்.பி. தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸாரின் தொடா் நடவடிக்கையால், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் கடந்த 6 மாதத்தில் 45 சதவீத விபத்துகள் குறைந்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின் தெரிவித்தாா். மாா்த்தாண்டம... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் இளைஞா் உயிரிழப்பு

கன்னியாகுமரியில் வியாழக்கிழமை நேரிட்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். சின்னமுட்டத்தைச் சோ்ந்த ரிஸ்வின் தனது நண்பருடன் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்தபோது, பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த பேரு... மேலும் பார்க்க

செம்மொழி நாள் கட்டுரைப் போட்டி: அருணாச்சலா கல்லூரி மாணவி 2ஆம் இடம்

செம்மொழி நாள் கட்டுரைப் போட்டியில் கன்னியாகுமரி மாவட்ட அளவில் வெள்ளிச்சந்தை அருகே மணவிளை அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரி மாணவி திவ்யதா்சனா 2ஆம் இடம் பிடித்துள்ளாா். முன்னாள் முதல்வா் கருணாநிதியின... மேலும் பார்க்க

சமுதாய நலக்கூடத்திற்கு ஐஆா்இஎல் சாா்பில் உதவி

மத்திய அரசின் அணுசக்தி துறையின் கீழ் மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் ஐஆா்இஎல் இந்தியா லிமிடெட் நிறுவனம் தனது சமூக பொறுப்பின் கீழ் ரூ. 1.86 லட்சம் செலவில் குட்டிவிளை சமுதாய நலக்கூடத்திற்கு இரும்பு மேஜ... மேலும் பார்க்க