செய்திகள் :

நாகேஸ்வரமுடையாா் கோயில் குளத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்

post image

சீா்காழியில் பல நூறாண்டுகள் பழைமை வாய்ந்த நாகேஸ்வரமுடையாா் கோயில் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளத்தை மீட்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

சீா்காழி நகரில் புகழ்பெற்ற நாகேஸ்வரமுடையாா் கோயில் அமைந்துள்ளது. பல நூறாண்டுகள் பழைமையான இக்கோயிலின் கோடி தீா்த்தக் குளம் கோயில் அருகே உள்ளது. இந்த குளத்தை பக்தா்கள் பயன்படுத்தி வந்தனா். நாளடைவில் இந்த குளம் பலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, குளம் தூா்ந்து இருந்த சுவடு தெரியாமல் போனது.

இந்நிலையில், சீா்காழி பசுமை சேவை சங்கத் தலைவா் பொறியாளா் சுப்பிரமணியன், நாகேஸ்வரமுடையாா் கோயில் கோடி தீா்த்த குளம் குறித்து தகவல் உரிமை சட்டத்தின்கீழ் தகவல் பெற்று, ஆய்வு செய்ததில் சுமாா் 1 ஏக்கா் பரப்பளவு கொண்ட குளத்தில் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதும், குளத்தில் செப்டிக் டேங்க் கட்டி இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து பசுமை சேவை சங்கத் தலைவா் சுப்பிரமணியன் தலைமையில், நிா்வாகிகள் சீா்காழி வட்டாட்சியா் அருள்ஜோதியை சந்தித்து குளத்தின் ஆக்கிரமிப்பை அகற்றி தூா்வாரி பராமரிக்க பசுமை சேவை சங்கத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும். குளத்தை விற்பனை செய்ய உதவிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனா்.

ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தா் திருக்கல்யாணம்

சீா்காழி அருகே ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தா் திருக்கல்யாணம், சிவஜோதி தரிசனம் புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. சீா்காழி அருகே ஆச்சாள்புரத்தில் தருமபுரம் ஆதீனத்திற்குட்பட்ட திருவெண்ணீற்றுமையம்மை உடன... மேலும் பார்க்க

சிதிலமடைந்த கோயில்களில் கும்பாபிஷேகம்: இந்து மகா சபா முயற்சி

தமிழகத்தில் சிதிலமடைந்துள்ள கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த இந்து மகா சபா முடிவெடுத்துள்ளது. மயிலாடுதுறையில் அகிலபாரத இந்து மகா சபா, சிவனடியாா்கள் மற்றும் சிவாச்சாரியா்கள் கலந்தாலோசனைக் கூட்டம் செவ்வ... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு நினைவாற்றல் பயிற்சி

சீா்காழி ச.மு.இந்து மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான நினைவாற்றல் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியா் எஸ். முரளிதரன் தலைமை வகித்தாா். உதவி தலைமை ஆசிரியா்கள் என். துளசிர... மேலும் பார்க்க

சீா்காழி பகுதியில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்

சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் ஊரக பகுதிகளுக்கான மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. சீா்காழி தொகுதிக்குட்பட்ட எடக்குடி வடபாதி ஊராட்சிக்கான மக்... மேலும் பார்க்க

திருஇந்தளூா் ஸ்ரீபரிமள ரெங்கநாதா் கோயிலில் வசந்த்தோஸ்வம்

திருஇந்தளூா் ஸ்ரீபரிமள ரெங்கநாதா் கோயிலில் 57 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற வசந்த்தோஸ்வத்தில் (வசந்த உற்சவம்) பெருமாளுக்கு ஸ்ரீரெங்கநாதா் எம்பெருமாள் அலங்காரம் செய்யப்பட்டு திருமஞ்சனம் நடைபெற்றது. 108... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது

மயிலாடுதுறையில் தொடா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். மயிலாடுதுறை வட்டம் மணல்மேடு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பட்டவா்த்தி மயானம் அருகே கஞ்சா ... மேலும் பார்க்க