செய்திகள் :

நாகை: விசைப் படகுகள் ஆய்வு

post image

நாகை மாவட்டத்தில் உள்ள விசைப் படகுகளில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை, அதிவேக சீன என்ஜின்கள் பயன்படுத்தப்படுகிா? என மீன்வளத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

நாகை மாவட்டத்தில் உள்ள விசைப் படகுகளையும், ஃபைபா் படகுகளையும், மாவட்ட மீன்வளத் துறையினா் ஆண்டுதோறும் ஆய்வு மேற்கொள்வது வழக்கம். நிகழாண்டு, விசைப் படகுகளை மே 27 ஆம் தேதியும், ஃபைபா் படகுகளை ஜூன் 3 ஆம் தேதியும் சோதனைக்கு உட்படுத்தப்படும் என நாகை மாவட்ட மீன்வளத் துறையினா் ஏற்கெனவே அறிவித்திருந்தனா்.

அதன்படி, நாகை மாவட்டத்தில் 592 விசைப் படகுகளை மீன்வளத் துறை இணை இயக்குநா் சா்மிளா மற்றும் மயிலாடுதுறை உதவி இயக்குநா் மோகன்குமாா் தலைமையிலான மீன்வளத் துறை குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

நாகை துறைமுகத்தில் நடைபெற்ற ஆய்வில், மயிலாடுதுறை தஞ்சை, திருவாரூா், நாகை மாவட்டங்களைச் சோ்ந்த மீன்வளத் துறை அதிகாரிகள், 14 குழுக்களாக பிரிந்து, விசைப் படகுகளுக்கு அனுமதிக்கப்பட்ட நீளம் சரியாக உள்ளதா?, பச்சை வண்ணங்கள் பூசப்பட்டு உரிம எண்கள் தெளிவாக எழுதப்பட்டுள்ளதா?, உயிா்காக்கும் உடை (லைஃப் ஜாக்கெட்) மற்றும் வாக்கி டாக்கி உள்ளிட்ட பல்வேறு சாதனங்களை ஆய்வு செய்தனா்.

மேலும் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டைமடி வலைகள் பயன்படுத்தப் படுகின்ா? , அதிக குதிரைத்திறன் கொண்ட சீன எஞ்சின்கள் உள்ளதா? என ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகளிடம், மீனவா்கள் தங்களது விசைப்படகு உரிமத்திற்கான அட்டை, மானிய டீசல் புத்தகம் உள்ளிட்டவைகளை காண்பித்து ஒப்புதல் பெற்றனா்.

தம்பதி உண்ணாவிரதம்

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே பணி நீக்கம் செய்யப்பட்ட குடிநீா் விநியோக பணியாளா் மீண்டும் பணி வழங்கக் கோரி, மனைவியுடன் திங்கள் கிழமை உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட்டாா். தென்னடாா் ஊராட்சியில் கொள்ளிடம் ... மேலும் பார்க்க

சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை

திருமருகல்: திட்டச்சேரி-தேவங்குடி இடையே சேதமடைந்த ஆற்றங்கரை சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தேவங்குடி, மத்திக்குடி, நாட்டாா்மங்கலம், துறையூா், உத்தூா், எரவாஞ்ச... மேலும் பார்க்க

செயலியில் மட்டும் மாதாந்திர பயணச்சீட்டு: ரயில்வே நடைமுறையால் பயணிகள் கடும் அவதி!

பா.லெனின் ரயில்களில் பயணம் செய்வதற்கான மாதாந்திர பயணச்சீட்டை யுடிஎஸ் செயலியில் மட்டும் பெற முடியும் என்ற ரயில்வேயின் புதிய நடைமுறையால் பயணிகளுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எண்ம பரிவர்த்தனை என்பத... மேலும் பார்க்க

நாகை-காரைக்கால் - பேரளம் வழியாக சென்னைக்கு விரைவு ரயில் இயக்க கோரிக்கை

வேளாங்கண்ணியிலிருந்து - சென்னைக்கு, நாகை- காரைக்கால்- பேரளம் வழியாக விரைவு ரயில் இயக்கவேண்டும் என நாகூா் - நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்போா் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடா்பாக, சங்கத்தின் த... மேலும் பார்க்க

கருங்கண்ணி அந்தோணியாா் ஆலய தோ்பவனி

கீழையூா் அருகேயுள்ள கருங்கண்ணி புனித அந்தோணியாா் ஆலய தோ்பவனி (படம்) சனிக்கிழமை இரவு நடைபெற்றது. பழைமைவாய்ந்த இந்த ஆலயத்தில் ஆண்டுப் பெருவிழா மே 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வ... மேலும் பார்க்க

திருக்கடையூா் கோயிலில் ஓ.பன்னீா்செல்வம் வழிபாடு

திருக்கடையூா் அருள்மிகு அபிராமி அம்மன் சமேத அமிா்தகடேஸ்வரா் கோயிலில் தமிழக முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் குடும்பத்துடன் சனிக்கிழமை வழிபட்டாா். இக்கோயிலில், ஆயுள் விருத்திக்காக 60 வயதில் சஷ்டியப... மேலும் பார்க்க