செய்திகள் :

'நாடகம் நடத்தாதீர்கள்; தமிழகம் முழுக்க தூய்மைப் பணியாளர் போராட்டம் வெடிக்கும்!' - போராட்டக்குழு

post image

'போராட்டக்குழு பத்திரிகையாளர் சந்திப்பு!'

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே பணி நிரந்தரம் வேண்டி போராடிக் கொண்டிருந்த தூய்மைப் பணியாளர்கள் கடந்த 13 ஆம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டு மறுநாள் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை அடுத்தக் கட்டமாக எடுத்துச் செல்வதைப் பற்றி போராட்டத்தை முன்னெடுத்து வரும் உழைப்போர் உரிமை இயக்கத்தினர் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தனர்.

குமாரசாமி
குமாரசாமி

'பணி நிரந்தரம்தான் தீர்வு!'

உழைப்போர் உரிமை சட்ட ஆலோசகர் குமாரசாமி பேசுகையில், 'பொதுநல வழக்கு என்ற பெயரில் காவல்துறை நாடகம் நடத்தியது. வேறு சட்டங்களை மதிக்காத காவல்துறை தொழிலாளர்களுக்கு எதிராக என்றால் மட்டும் உடனே பாயும்.

எங்களின் போராட்டம் ஓயவில்லை, தொடரும். கைது செய்தவர்களை உடனடியாக விடுவியுங்கள் என நீதிபதி கூறினார். நீதிபதி எங்களுக்கு நிவாரணம் கொடுத்திருக்கிறார். எதிர்க்குரல் எழுப்ப உரிமை இருக்கிறது என நீதிமன்றம் கொடுத்திருக்கிறது. போராட அனுமதி கேட்போம். அரசு எல்லாவற்றையும் ராம்கி நிறுவனத்துக்கு சாதகமாக செய்து அநீதி இழைத்துக் கொண்டிருக்கிறது.

குமாரசாமி
குமாரசாமி

நிரந்தரம் இல்லாமல் சுதந்திரம் இல்லை. திருமாவளவன், அதியமான் போன்றோரின் கரிசனத்தை மதிக்கிறோம். திருமா எந்தச் சூழலில் அந்தக் கருத்தை சொன்னார் எனத் தெரியவில்லை. மனிதக் கழிவுகளை மனிதன் அள்ளக்கூடாது. அதேமாதிரி, குப்பைகளையும் மனிதன் அள்ளக்கூடாது. ஆனால், அப்படியொரு நிலையை எட்டும் வரை என்ன செய்வது? நாங்கள் அந்த வேலையை பார்க்கும் வரை எங்களுக்கான பாதுகாப்பு வேண்டும் என நினைக்கிறோம். தொழிலாளர்களின் பணி நிரந்தரம் என்கிற கனவு நிறைவேற வேண்டும். அப்படியென்றால்தான் இது பெரியாரின் சமூக நீதி மண். பணி நிரந்தரம் என்பதுதான் எங்களின் கோரிக்கை.

'அடுத்தக்கட்டப் போராட்டம்!'

பணி நிரந்தரம் தொடர்பான வழக்கு தொழில் தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் முடிவு வரும் வரை 31.07.2025 அன்று என்ன நிலையில் தொழிலாளர்கள் இருந்தார்களோ அதே நிலையில் தொடர வைக்க வேண்டும். முதலமைச்சருடன் எங்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை. முதலமைச்சர் அறிவார்ந்த அனுபவ அரசியல்வாதி. அவர் தொழிலாளர்களின் சமூகப் பொருளாதார சூழலை உணர்ந்துதான் பணி நிரந்தரம் வேண்டி கடிதமெல்லாம் எழுதினார்.

தமிழ்நாடு முழுக்க போராட்டம் வெடிக்கும். ஏற்கெனவே திருநெல்வேலி, மதுரை, கடலூர் பகுதிகளில் போராட்டம் தொடங்கிவிட்டது. போராட்டத்தை சுமுகமாக முடியுங்கள். பிரச்னை தீர வேண்டாம் என்றால் நாடகம் நடத்துங்கள். பிரச்னை தீர வேண்டுமென்றால் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள்.

முதலமைச்சரை சந்தித்தவர்கள் அவுட் சோர்சிங் செய்யப்பட்டவர்கள் அல்ல. அவர்கள் வேறு யாரோ. சேகர் பாபு பெரிய ஆள். அவருடைய சாமர்த்தியத்தை குறைத்து மதிப்பிட முடியாது.

தொழிலாளிக்கு நியாயம் கேட்கும் வழக்குகளை நீதிமன்றம் தாமதப்படுத்தியிருக்கிறது.

எங்களுடைய தன்மானத்துக்கு எதிராக வருகிற எந்தக் கொம்பனுக்கும் அஞ்சமாட்டோம். நாங்கள் கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். யாருக்கும் பயப்படமாட்டோம்.

குமாரசாமி
குமாரசாமி

சிபிஐ மாநாட்டிலேயே தனியார்மயத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. சண்முகமும் மாநகராட்சி பணியாளர்கள் நிரந்தரமாக்குவதில் உறுதியாக இருக்கிறோம் எனக் கூறியிருக்கிறார். நாங்களும் அடுத்தகட்டமாக ரிப்பன் மாளிகைக்கு பின்புறம் அல்லது ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் போராட வேண்டும் என அனுமதி கேட்டு வேப்பேரி காவல்நிலையத்தில் கடிதம் கொடுத்திருக்கிறோம்.' என்றார்.

தூய்மைப் பணியாளர்கள்: "திருமாவளவன் கூறுவது சரியல்ல" - பணி நிரந்தரத்தை விவரிக்கும் CPM பெ.சண்முகம்

சென்னையில் தனியார்மயமாக்கலை எதிர்த்தும், பணி நிரந்தரம் கோரியும் ரிப்பன் மாளிகைக்கு வெளியே 13 நாள்களாகப் போராடிக்கொண்டிருந்த தூய்மைப் பணியாளர்களை ஆகஸ்ட் 13-ம் தேதி நள்ளிரவு நீதிமன்ற உத்தரவு பெயரில் வலு... மேலும் பார்க்க

பாமக பொதுக்குழுவில் எழுந்த அதிமுக ஆதரவுக் குரல்கள்; உணர்ச்சிவசப்பட்ட ராமதாஸ் - என்ன நடந்தது?

`அன்புமணியின் செயல் தலைவர் பதவி பறிக்கப்படலாம்...’பாட்டாளி மக்கள் கட்சியில், மருத்துவர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையேயான மோதல், ஒன்பது மாதங்களைக் கடந்து உச்சம் தொட்டுள்ள நிலையில், ராம... மேலும் பார்க்க

புதுச்சேரி: `அரைகுறை ஆடைகளுடன் வரும் பெண்களுக்கு ரெஸ்டோ பாரில் அனுமதி இலவசம்’ - அரசை சாடும் அதிமுக

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க மாநிலச் செயலாளர் அன்பழகன், ``புதுச்சேரியில் புற்றீசல் போல ரெஸ்டோ பார்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன. அதில் ஒரு ரெஸ்டோ பாரில் நடைபெற்ற கொலை தொடர்பாக காவல் ... மேலும் பார்க்க

``தமிழகத்திற்கு கிடைத்த முக்கியமான அங்கீகாரம்; திமுக ஆதரிக்க வேண்டும்"- நயினார் நாகேந்திரன் கோரிக்கை

துணை ஜனாதிபதியாக இருந்த ஜக்தீப் தன்கர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து அப்பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.நேற்று கூடிய பா.ஜ.க தலைமை கூட்டத்தில், துணை ஜனாதிபதி பதவி வேட்பாளராக மகார... மேலும் பார்க்க

TVK: கிடா விருந்து; 1.50 லட்சம் நாற்காலிகள்; விஜய்யின் ஸ்பெஷல் உரை - மதுரை மாநாடு லேட்டஸ்ட் அப்டேட்

கிடா விருந்து, அனைத்து மத வழிபாட்டுத் தலங்களில் பிரார்த்தனை, ஊரெங்கும் விளம்பரங்கள், வீடு வீடாக அழைப்பு என்று களைகட்டி வருகிறது மதுரையில் நடைபெறவுள்ள தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு.புஸ்ஸி ஆனந்த்முதல் ம... மேலும் பார்க்க

ADMK: `அதிமுக பலவீனமா இருக்கு, அதை சரிசெய்யத்தான் நான் இருக்கேன்' - சசிகலா பேசியது என்ன ?

சசிகலா தனது 71-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (திங்கள்கிழமை), சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்ச... மேலும் பார்க்க