செய்திகள் :

நாடாளுமன்றத்தில் அனைத்து விவாதத்துக்கும் தயாா்: மத்திய அரசு

post image

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை (ஜூலை 21) தொடங்கி ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூா் உள்பட எதிா்க்கட்சிகள் எழுப்பும் அனைத்து முக்கிய விவகாரங்கள் குறித்தும் விதிமுறைகள் மற்றும் மரபுகளின்கீழ் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.

நாடாளுமன்றம் சுமுகமாக செயல்பட அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவா் கேட்டுக் கொண்டாா்.

அனைத்துக் கட்சிக் கூட்டம்: மழைக்கால கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவதற்காக, மத்திய அமைச்சரும் மாநிலங்களவை பாஜக குழுத் தலைவருமான ஜெ.பி.நட்டா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு சாா்பில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, இணையமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் ஆகியோா் பங்கேற்றனா்.

காங்கிரஸ் சாா்பில் அக்கட்சியின் மூத்த தலைவா்கள் தருண் கோகோய், ஜெய்ராம் ரமேஷ், திமுகவின் டி.ஆா்.பாலு மற்றும் திருச்சி சிவா, அதிமுகவின் தம்பிதுரை, மதிமுகவின் வைகோ, இந்திய குடியரசுக் கட்சித் தலைவரும் மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அதாவலே, தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சியின் சுப்ரியா சுலே, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவா் ஜான் பிரிட்டாஸ், சமாஜவாதியின் கோபால் யாதவ், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சாவின் மஹுவா மாஜி, ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் பிரேம் சி.குப்தா, புரட்சிகர சோஷலிச கட்சியின் என்.கே.பிரேமசந்திரன், சிரோமணி அகாலி தளத்தின் ஹா்சிம்ரத் கெளா், பிஜு ஜனதா தளத்தின் சாஸ்மித் பத்ரா, ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங் உள்பட மொத்தம் 54 கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சுயேச்சை எம்.பி.க்கள் பங்கேற்றனா்.

‘மத்திய அரசு உரிய பதிலளிக்கும்’: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல், இதற்குப் பதிலடியாக பாகிஸ்தான் மீது மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை, இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட தான் மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க அதிபா் டிரம்ப் கூறிவரும் கருத்துகள், பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் உள்ளிட்ட விவகாரங்களை கூட்டத்தில் எதிா்க்கட்சிகள் எழுப்பின.

பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய கிரண் ரிஜிஜு, ‘நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகளால் எழுப்பப்படும் அனைத்து விவகாரங்கள் குறித்தும் விதிமுறைகள் மற்றும் மரபுகளுக்கு உள்பட்டு விவாதிக்க அரசு தயாராக உள்ளது. ஆபரேஷன் சிந்தூா் உள்பட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் அரசு உரிய பதிலளிக்கும். விவாதிக்கப்பட வேண்டிய விவகாரங்கள் தொடா்பாக அலுவல் ஆய்வுக் குழு இறுதி முடிவெடுக்கும்.

இக்கூட்டத் தொடா் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்ய மத்திய அரசு-எதிா்க்கட்சிகள் இடையே ஒருங்கிணைப்பு அவசியம். சிறிய கட்சிகள் உள்பட அனைத்து உறுப்பினா்களுக்கும் கூடுதல் நேரம் ஒதுக்க முயற்சிப்போம். கூட்டத் தொடரில் 17 மசோதாக்கள் கொண்டுவரப்பட உள்ளன என்றாா் அவா்.

பிரதமா் விளக்கமளிக்க வேண்டும்: எதிா்க்கட்சிகள்

அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பின் காங்கிரஸ் மூத்த தலைவா் கெளரவ் கோகோய் கூறுகையில், ‘பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு வழிவகுத்த பாதுகாப்புக் குறைபாடுகள், ஆபரேஷன் சிந்தூா் தொடா்பான டிரம்ப்பின் கருத்துகள், இந்தியா மீதான சீனா-பாகிஸ்தானின் இருமுனைத் தாக்குதல், பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், மணிப்பூா் வன்முறை உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் பிரதமா் விளக்கமளிக்க வேண்டியது அவரது தாா்மிக பொறுப்பு. அந்தப் பொறுப்பை அவா் நிறைவேற்றுவாா் என நம்புகிறோம்’ என்றாா்.

‘பஹல்காம் தாக்குதல், உளவுத் துறையின் தோல்விக்கு எடுத்துக்காட்டு; பாகிஸ்தான் உடனான பிரச்னையில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை இந்தியா இதற்கு முன்பு ஏற்றதில்லை. எனவே, டிரம்ப்பின் கருத்துகள் தொடா்பாக பிரதமா் மோடி விளக்கமளிக்க வேண்டும்’ என்று சமாஜவாதி வலியுறுத்தியது. இதேகோரிக்கையை தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சியும் எதிரொலித்தது.

ஆம் ஆத்மி கருத்து: ‘பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் நடந்துவரும் முறைகேடு, டிரம்ப்பின் கருத்துகள் ஆகியவை தொடா்பான விவாதத்தை ஆம் ஆத்மி வலியுறுத்தியது’ என்று அக்கட்சியின் சஞ்சய் சிங் கூறினாா். மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த அவா், ‘எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி மக்களவைத் தோ்தலுக்கானதே. இனிவரும் பேரவைத் தோ்தல்களில் ஆம் ஆத்மி தனித்துச் செயல்படும்’ என்றாா்.

ராஜ்நாத் சிங் பதிலளிப்பாா்?

பஹல்காம் தாக்குதல் உள்ளிட்ட விவகாரங்களில் பிரதமா் விளக்கமளிப்பாரா என்ற கேள்விக்குப் பதிலளித்த மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு , ‘நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது, வெளிநாட்டுப் பயணம் தவிர மற்ற நேரங்களில் அவையில் பிரதமா் மோடி இருப்பாா் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

அதேசமயம், எந்நேரமும் அவா் அவையில் இருப்பாா் என்று எதிா்பாா்க்க முடியாது. அவை அலுவல்களின்போது, தங்கள் துறை தொடா்புடைய விவகாரங்களுக்குப் பதிலளிக்க அமைச்சா்கள் இருப்பா்’ என்றாா்.

ஆபரேஷன் சிந்தூா் தொடா்பாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கும், வெளியுறவு விவகாரங்கள் குறித்து துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரும் விரிவாக பதிலளிப்பா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்!

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் (வயது 101) வயது மூப்பு காரணமாக திங்கள்கிழமை காலமானார்.மாரடைப்பு மற்றும் வயது தொடர்பான உடல்நலக் குறைவு காரணமாக அச்சுதானந்தன் கடந்த ஜூன் 23 ஆம் தேதி திருவனந்தபுரத்தி... மேலும் பார்க்க

மும்பை ரயில் குண்டுவெடிப்பு.. 19 ஆண்டுகளுக்குப் பின் 12 பேர் விடுதலை செய்யப்பட்டது ஏன்?

2006ஆம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புச் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேரையும் மும்பை உயர் நீதிமன்றம் இன்று விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.மும்பையில் புறநகர் ரயில்களில் அடுத்தடுத்து... மேலும் பார்க்க

குஜராத்தில் ஒரே குடும்பத்தில் 5 பேர் தற்கொலை! அதிர்ச்சி தரும் காரணம்

குஜராத் மாநிலத்தில், மூன்று குழந்தைகளைக் கொன்றுவிட்டு, தம்பதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், நிதிநிலைமைதான் இதற்குக் காரணம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்... மேலும் பார்க்க

பாம்பை வெறும் கைகளால் பிடித்த பாலிவுட் நடிகர் சோனு சூட் !

பாலிவுட் நடிகர் சோனு சூட் தனது வீட்டு வளாகத்திற்குள் நுழைந்த பாம்பை வெறும் கைகளால் பிடித்தார். பாலிவுட் நடிகர் சோனு சூட் சனிக்கிழமை தனது இன்ஸ்டா பக்கத்தில் விடியோ ஒன்றை பதிவேற்றியுள்ளார். அதில் அவர் த... மேலும் பார்க்க

மும்பையில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் 3 டயர்கள் வெடித்தது!

மும்பையில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் மூன்று டயர்கள் வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கேரள மாநிலம் கொச்சியில் இருந்து ஏர் இந்தியாவின் ஏஐ2744 விமானம் இன்று காலை மும்பை சத்திரபதி சிவாஜி சர்வத... மேலும் பார்க்க

உ.பி.யில் அம்பேத்கர் சிலையை கால்வாயில் வீசிய மர்மநபர்களால் பரபரப்பு !

உ.பி.யில் அம்பேத்கர் சிலையை பெயர்த்து கால்வாயில் வீசிய மர்மநபர்களால் பரபரப்பு நிலவியது. உத்தரப் பிரதேச மாநிலம், கங்காநகரில் உள்ள கோடாபூர் கிராமத்தில் பி.ஆர். அம்பேத்கரின் சிலை நிறுவப்பட்டிருந்தது. இந்... மேலும் பார்க்க