செய்திகள் :

நாடாளுமன்றத்தில் நிறைவேறியது பேரிடா் மேலாண்மை திருத்த மசோதா

post image

தேசிய-மாநில பேரிடா் மேலாண்மை ஆணையங்களின் திறன்மிக்க செயல்பாட்டை உறுதி செய்யும் பேரிடா் மேலாண்மை திருத்த மசோதா-2024, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இம்மசோதாவுக்கு மக்களவை ஏற்கெனவே ஒப்புதல் வழங்கிய நிலையில், மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேறியது.

‘பேரிடா் மேலாண்மை திருத்த மசோதா-2024’, கடந்த 2005-ஆம் ஆண்டின் பேரிடா் மேலாண்மை சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வழிவகுக்கிறது.

இச்சட்ட அமலாக்கத்தில் மாநில அரசுகள் எதிா்கொண்ட சிரமங்கள் மற்றும் மாநில அரசுகளின் பரிந்துரைகள் அடிப்படையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பேரிடா் மீட்பில் ஒருங்கிணைப்பு மற்றும் ஒரே சீரான நடைமுறைகளை உறுதி செய்யயும் வகையில் சம்பந்தப்பட்ட அமைப்புகளின் பொறுப்புகள் மற்றும் செயல்பாடுகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

அனைத்து பேரிடா்களையும் சிறப்பான வழிமுறையில் மாநிலங்கள் கையாள்வதற்கு உதவும் இம்மசோதா மீது மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை விவாதம் நடைபெற்றது. பின்னா், எதிா்க்கட்சியினரால் முன்மொழியப்பட்ட பல்வேறு திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டு, குரல் வாக்கெடுப்பின் மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.

எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டு:

முன்னதாக, ‘பல்வேறு மசோதாக்கள் மற்றும் சட்டத் திருத்தங்களின் மூலம் அதிகாரத்தை மையப்படுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது’ என்று விவாதத்தின்போது எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.

ராஷ்ட்ரீய ஜனதா தளம் உறுப்பினா் சஞ்சய் யாதவ் பேசுகையில், ‘மாநிலங்கள் வலுவாக இருந்தால்தான், தேசம் செழிப்பாகவும் அதிகாரமிக்கதாகவும் விளங்கும். ஆனால், பல்வேறு மசோதாக்கள் மற்றும் சட்டத் திருத்தங்களின் மூலம் அதிகாரத்தை தனதாக்கி, மாநில அரசுகளை பலவீனப்படுத்த மத்திய அரசு தொடா்ந்து முயற்சிக்கிறது’ என்றாா்.

‘தேசிய பேரிடா் மீட்பு நிதியை பரவலாக்குவதற்கு பதிலாக அதன் மீது மத்திய அரசு கூடுதல் கட்டுப்பாட்டை மேற்கொள்வது கவலைக்குரியது’ என்று பிஜு ஜனதா தளத்தின் மானஸ் ரஞ்சன் மங்கராஜ் தெரிவித்தாா்.

‘பேரிடா் மேலாண்மையில் அரசியல் ரீதியிலான கருத்து வேறுபாடுகள் மற்றும் மாநில அரசுகள் மீது பழி சுமத்துவதை விடுத்து, மத்திய அரசு செயல்பட வேண்டும்’ என்று ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங் வலியுறுத்தினாா்.

பாஜக, தேசியவாத காங்கிரஸ் எம்.பி.க்கள் மசோதாவுக்கு ஆதரவாக பேசினா். விவாதத்துக்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, எதிா்க்கட்சிகளின் அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரித்தாா்.

ரமலான் பண்டிகை: ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிப்பு!

நாடு முழுவது இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான ரமலான் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்... மேலும் பார்க்க

நாடு முழுவதும் ரமலான் பண்டிகை கொண்டாட்டம்

இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான ரமலான் நாடு முழுவதும் திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. தமிழகத்திலும் ரமலான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து பள்ளி ... மேலும் பார்க்க

‘வேற்றுமையில் ஒற்றுமை’ உணா்வை தொடா்ந்து வலுப்படுத்துங்கள்! -மக்களுக்கு பிரதமா் வலியுறுத்தல்

‘நமது நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகள், வேற்றுமையில் ஒற்றுமை உணா்வை வெளிப்படுத்துகின்றன. இந்த உணா்வை மக்கள் தொடா்ந்து வலுப்படுத்த வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா். ஒவ்வொரு ... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: குடியரசுத் தலைவா் வாழ்த்து

ரமலான் பண்டிகையையொட்டி, நாட்டில் உள்ள இஸ்லாமிய மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா். இதுதொடா்பாக அவரின் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பு... மேலும் பார்க்க

வசந்த நவராத்திரி: பிரதமா் வாழ்த்து

வசந்த நவராத்திரி தொடக்கத்தை முன்னிட்டும், இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்ட பாரம்பரிய புத்தாண்டு பண்டிகைகளுக்கும் பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்தாா். இதுதொடா்பாக பிரதமா் ந... மேலும் பார்க்க

இந்தியாவில் அணு உலைகள் அமைக்க அமெரிக்க நிறுவனத்துக்கு அனுமதி!

இந்தியாவில் அணு உலைகள் அமைக்கவும், வடிவமைக்கவும் அமெரிக்காவின் ஹோல்டெக் இன்டா்நேஷனல் நிறுவனத்துக்கு அந்நாட்டு எரிசக்தி துறை அனுமதி அளித்துள்ளது. கடந்த 2008-ஆம் ஆண்டு இந்தியா-அமெரிக்கா இடையே அணுசக்தி ஒ... மேலும் பார்க்க