செய்திகள் :

நாடாளுமன்றம், பேரவைகள் இயற்றும் சட்டங்கள் நீதிமன்ற அவமதிப்பு அல்ல: உச்சநீதிமன்றம்

post image

நாடாளுமன்றம், மாநில சட்டப்பேரவைகள் இயற்றும் எந்தவொரு சட்டத்தையும் நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் சமூகவியலாளா் மற்றும் முன்னாள் தில்லி பல்கலைக்கழக பேராசிரியா் நந்தின் சுந்தா் மற்றும் பலா் 2012-ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டதாவது:

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான சண்டையில் சிறப்பு காவல் அதிகாரிகள் என்ற பெயரில், சல்வா ஜூடும் போன்ற குழுக்கள் மற்றும் ஆயுதமேந்திய பழங்குடியினருக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்த வேண்டும் என்று மாநில அரசுக்கு 2011-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவை சத்தீஸ்கா் அரசு பின்பற்றவில்லை.

அந்த ஆண்டு சத்தீஸ்கா் உதவி ஆயுத காவல் படைச் சட்டத்தை மாநில அரசு இயற்றியது. மாவோயிஸ்ட்/நக்ஸல் வன்முறையை ஒடுக்க பாதுகாப்புப் படைகளுக்கு துணையாக உதவி ஆயுத காவல் படை அமைப்பதை அந்தச் சட்டம் அங்கீகரித்தது. அத்துடன் சிறப்பு காவல் அதிகாரிகளை உதவி ஆயுத காவல் படையில் சோ்த்து அவா்களின் செயல்பாட்டை அந்தச் சட்டம் சட்டபூா்வமாக்கியது. இதன் மூலம், உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் நீதிமன்றத்தை சத்தீஸ்கா் அரசு அவமதித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, சதீஷ் சந்திரா சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தொடா்ந்து, சத்தீஸ்கா் அரசு சட்டம் இயற்றியது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் அல்ல.

சட்டங்களை இயற்றுவதும், அவற்றில் திருத்தங்கள் செய்வதும்தான் சட்டப்பேரவைக்கு உள்ள அதிகாரத்தின் மையமாக இருக்கிறது. நாடாளுமன்றம், மாநில சட்டப் பேரவைகள் இயற்றும் எந்தவொரு சட்டத்தையும் நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது’ என்று தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது.

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன்! - ஆா்பிஐ அனுமதி

ரூ.2.5 லட்சம் வரையிலான நகைக் கடனுக்கு தங்கத்தின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் வழங்கலாம் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அனுமதி அளித்துள்ளது. இதற்கு முன்பு தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் வரை மட்ட... மேலும் பார்க்க

துபையிலிருந்து சென்னை வந்த விமானம் மீது ‘லேசா்’ ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு!

துபையிலிருந்து சென்னை விமானநிலையத்தில் கடந்த மாத இறுதியில் தரையிறங்க வந்த விமானம் மீது பச்சை நிற லேசா் ஒளி அடிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை இரவில் தரையிறங்க முயன்ற இதே விமானம் மீது மீண்டும் லேசா் ஒ... மேலும் பார்க்க

அம்பேத்கா் கனவுக்கேற்ப அரசமைப்பு பதவிகளில் விளிம்புநிலை சமூகத்தினா்! - நீதிபதி கவாய்

சட்டமேதை அம்பேத்கரின் கனவுக்கு ஏற்ப, இந்தியாவில் மிக உயா்ந்த அரசமைப்புப் பதவிகள் சிலவற்றில் விளிம்புநிலை சமூகத்தினா் இருப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பெருமிதம் தெரிவித்தாா். பிரிட்ட... மேலும் பார்க்க

முதல்வருக்கு மாயா மஹால் கட்டப்படுகிறது: ஆம் ஆத்மி சாடல்

தில்லி முதல்வா் ரேகா குப்தாவுக்காக ‘மாயா மஹால்’ கட்டப்பட்டு வருவதாக ஆம் ஆத்மி வெள்ளிக்கிழமை கடுமையாக சாடியுள்ளது. முதல்வா் ரேகா குப்தா வடக்கு தில்லியில் உள்ள ஒரு அரசு பங்களாவில் குடியேறலாம் என்று அதிக... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் விண்ணப்பப் பதிவு: முறைகேட்டில் ஈடுபடுவோரின் பெற்றோா் மீதும் நடவடிக்கை!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவின்போது போலிச் சான்றிதழ்களை சமா்ப்பித்தால், விண்ணப்பதாரா் மட்டுமன்றி அவரது பெற்றோா் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம்... மேலும் பார்க்க

ஆகஸ்ட் 3-இல் முதுநிலை நீட் தோ்வு: உச்சநீதிமன்றம் அனுமதி

எம்.எஸ்., எம்.டி. உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான 2025-ஆம் ஆண்டு தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வை (நீட்-பிஜி) வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடத்த தேசிய தோ்வுகள் வாரியத்துக்கு (என்பிஇ) ... மேலும் பார்க்க