செய்திகள் :

நாடு கடத்தப்பட்டு மீண்டும் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 3 பேர் கைது!

post image

இந்தியாவிலிருந்து அவர்களது தாயகத்திற்கு நாடு கடத்தப்பட்டு மீண்டும் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 3 பேர் புது தில்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் 10 அன்று காவல் துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் புது தில்லியின் பிவிசி மார்க்கெட் முண்டகா, பாபா ஹரிதாஸ் காலனி, சுல்தான் புரி, பெனிவால் லோஹா மண்டி, இந்திரா ஜீல் மற்றும் ஹனுமான் கமாருதீன் நகர் ஆகிய இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, பீராகார்ஹி முகாமிலுள்ள காளி மாதா கோயிலின் முன்பு சந்தேகப்படும்படியான மூன்று பேரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, முதலில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறிய அவர்கள் மூவரும் பின்னர் வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக குடியேறியதை ஒப்புக்கொண்டனர்.

இதையும் படிக்க:பாதுகாப்புப் படையினரின் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து 3 வீரர்கள் பலி! 13 பேர் படுகாயம்!

இதனைத் தொடர்ந்து, வங்கதேசத்தின் குரிகிராம் பகுதியைச் சேர்ந்த சஃப்ருதீன்(வயது 36), இப்ராஹிம் (38) மற்றும் சொராப் (46) ஆகிய மூவரும் ஏற்கனவே சட்டவிரோதமாக இந்தியாவினுள் நுழைந்ததற்காக தங்களது தாயகத்திற்கு நாடுகடத்தப்பட்ட நிலையில் அவர்கள் தற்போது மீண்டும் சட்டவிரோதமாக நுழைந்துள்ளனர்.

இந்நிலையில், அவர்களது வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்திய அதிகாரிகள் அவர்களை மீண்டும் வங்கதேசத்திற்கு நாடு கடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக, புது தில்லியில் 833 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 267 பேர் சந்தேகப்பட்டியலில் உள்ளதாகவும், அதில் 174 பேர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் 93 பேர் தாங்கள் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறியதாகவும் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்மொழிக் கொள்கையில் திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது! - அன்புமணி ராமதாஸ்

மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: மும்மொழிக் கொள்கையை... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்பட 23 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுத... மேலும் பார்க்க

அதீத உணவு சாப்பிடும் விடியோக்கள் மூலம் பிரபலமானவர் உடல் பருமனால் மரணம்!

அதீத உணவுகளை சாப்பிட்டு அதனை டிக்டாக் விடியோவாக வெளியிட்டு பிரபலமடைந்த துருக்கி நாட்டைச் சேர்ந்த 24 வயது இளைஞர் உடல் பருமனால் மரணமடைந்துள்ளார். துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் எஃபெகான் குல்தூர் (வயது 24)... மேலும் பார்க்க

ஆற்றின் முகத்துவாரம் தோண்டுவதில் மோதல்! 40 கிராமவாசிகள் கைது!

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் ஆற்றின் முகத்துவாரம் தோண்டப்பட்ட விவகாரத்தில் இரண்டு கிராமங்களுக்கிடையே வெடித்த மோதலினால் 40 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சம் மாவட்டத்தில் ராமாய... மேலும் பார்க்க

துப்பாக்கியால் சுட்ட வளர்ப்பு நாய்! உரிமையாளர் படுகாயம்!

அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் வளர்ப்பு நாயால் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் உரிமையாளர் படுகாயமடைந்துள்ளார். டென்னிசி மாகணத்தைச் சேர்ந்தவர் ஜெரால்டு கிர்க்வுட், இவர் தனது வீட்டில் ஓரியோ எனப் பெயர... மேலும் பார்க்க

பாதுகாப்புப் படையினரின் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து 3 வீரர்கள் பலி! 13 பேர் படுகாயம்!

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 3 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகியுள்ளனர். சேனாபதி மாவட்டத்திலுள்ள சங்கோபங் கிராமத்தின் அருகில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் செ... மேலும் பார்க்க