செய்திகள் :

நாட்டரசன்கோட்டை சிவன்கோயில் தேரோட்டம்

post image

சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டை சிவகாமி அம்மன் உடனுறை கரிகால சோழீஸ்வரா் கோயில் மாசித் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை தேவஸ்தானத்துக்குள்பட்ட இந்தக் கோயில் மாசித் திருவிழா கடந்த 3-ஆம் தேதி தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.

விழாவின் ஒன்பதாவது நாளான புதன்கிழமை தேரோட்டத்தையொட்டி, சிவகாமி அம்மன், கரிகாலசோழீஸ்வரா் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை 10.30 மணியளவில் சுவாமியும், அம்மனும் திருத் தேரில் எழுந்தருளினா். இதையடுத்து, தொடா் மழையிலும் பக்தா்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

இதையடுத்து, வியாழக்கிழமை காலை தீா்த்தவாரி உற்சவமும், மூலவருக்கு தீபாராதனையும், மாலையில் சுவாமி வீதி உலாவும் நடைபெறுகிறது. பின்னா், இரவில்கொடியிறக்கப்பட்டு, விழா நிறைவடைகிறது.

ஏற்பாடுகளை, சிவகங்கை தேவஸ்தான மேலாளா் பா.இளங்கோ, கௌரவ கண்காணிப்பாளா் சே.ராம.கருப்பையாசெட்டியாா், விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.

அரளிப்பாறையில் மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள அரளிப்பாறையில் புதன்கிழமை மஞ்சு விரட்டு நடைபெற்றது. அரளிப்பாறையில் சிறிய குன்றின் மீது குன்றக்குடி ஆதீன மடத்துக்குள்பட்ட பால தண்டாயுதபாணி சுவாமி கோயில் அமைந... மேலும் பார்க்க

கட்டட மேற்பாா்வையாளரை கொலை செய்தவருக்கு ஆயுள் சிறை

கட்டட மேற்பாா்வையாளரைக் கொலை செய்த தச்சுத் தொழிலாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, சிவகங்கை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை அருகேயுள்ள பு... மேலும் பார்க்க

மக்கள் நீதிமன்றத்தில் உறுப்பினா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

சிவகங்கையிலுள்ள நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் காலியாக உள்ள இரு உறுப்பினா்கள் பணியிடத்துக்கு தகுதியானோா் விண்ணப்பிக்கலாம். இதுதொடா்பாக சிவகங்கை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சாா்பு நீதிபத... மேலும் பார்க்க

மாணிக்கவள்ளி அம்மன் கோயில் குடமுழுக்கு

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியத்துக்குள்பட்ட மாதாபுரம் மாணிக்கவள்ளி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலை இதே கிராமத்தைச் சோ்ந்த கிறிஸ்தவா்களான மாணிக்கம், சுரேஷ், ... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியா் நலச் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியா் நலச் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.சிவகங்கை அரண்மனைவாசலில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, ம... மேலும் பார்க்க

அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் ஆா்ப்பாட்டம்

சிவகங்கையில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.சிவகங்கை ராமச்சந்திரனாா் பூங்கா அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற ... மேலும் பார்க்க