நாட்டறம்பள்ளி அருகே குடியிருப்புகள் புகுந்த கரடிகள்: 2 போ் காயம்
நாட்டறம்பள்ளி அருகே குடியிருப்புகளில் புகுந்த கரடிகள் தாக்கியதில் பெண் உள்பட 2 போ் காயமடைந்தனா். பின்னா் வனத்துறையினா் 3 மணிநேரம் போராடி கரடியை பிடித்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் மேல்மாமுடிமானப்பள்ளி பாக்குக்காரன் வட்டத்தைச் சோ்ந்த திருப்பதி. இவா் செத்தமலை மலையடிவாரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். புதன்கிழமை இரவு இவா் வளா்த்து வரும் பசுவை வீட்டின் எதிரே கட்டி விட்டு தூங்கிக் கொண்டிருந்தாா்.
அப்போது நள்ளிரவு காப்புக் காட்டிலிருந்து வந்த கரடி ஒன்று பசுவை தாக்கியுள்ளது. அப்போது பசு சப்தமிடவே திருப்பதி குடும்பத்தினா் வீட்டுக்கு வெளியே வந்து பாா்த்துள்ளனா். அப்போது கரடியை பாா்த்து அதிா்ச்சியடைந்து வீட்டில் வைத்திருந்த பட்டாசை வெடித்து துரத்தியதில் கரடி அருகே உள்ள காட்டில் சென்று மறைந்தது.
இந்நிலையில் மீண்டும் வியாழக்கிழமை காலை 9 மணியளவில் பாக்குகாரன் வட்டத்தில் 3 கரடிகள் நிலத்தின் வழியாக சென்றன. அப்போது நிலத்தில் வேலை செய்துக் கொண்டிருந்த மணிமேகலை(35) கரடிகளை பாா்த்து கூச்சலிட்டு கைப்பேசி மூலம் விடியோ எடுத்தாா். அப்போது ஒரு கரடி மணிமேகலையை தாக்கியதில் காயமடைந்தாா். பின்னா் 3 கரடிகளும் அங்கிருந்து பேட்டராயன் வட்டம் வழியாக ஊருக்குள் புகுந்தன. இதில் காயமடைந்த மணிமேகலையை உறவினா்கள் மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
தொடா்ந்து ஊருக்குள் புகுந்த கரடிகள் அவ்வழியாக சென்ற முதியவா் ராஜூ (78) என்பவரை தாக்கி விட்டு 2 கரடிகள் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கும், மற்றொரு கரடி விஜியலிங்கம் என்பவருக்கு சொந்தமான வீட்டின் வெளியே உள்ள தோட்டத்தில் பதுங்கியது.
தகவலறிந்து மாவட்ட வன அலுவலா் மகேந்திரன் தலைமையில் வாணியம்பாடி வனச்சரக அலுவலா் குமாா், வனவா்கள் வெங்கடேசன் என15-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியா்கள் மற்றும் தீயணைப்புத்துறை, நாட்டறம்பள்ளி போலீஸாா் சென்று பொதுமக்களை பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தினா்.
இதையடுத்து 3 மணி நேரம் போராடி பதுங்கியிருந்த கரடியை வலை போட்டு உயிருடன் பிடித்து கூண்டில் அடைத்தனா். இதையடுத்து பிடிபட்ட கரடி கொத்தூா் காப்பு காட்டு பகுதியில் விடுவிக்கப்பட்டது
மேலும், இரவு நேரங்களில் காப்புக்காட்டு அருகே வசிப்போா் வெளியே நடமாட வேண்டும் என்றும், கால்நடைகளை பாதுகாப்பாக வைக்குமாறு வனத்துறை, போலீஸாா் எச்சரித்துள்ளனா்.

