செய்திகள் :

நாட்டில் கரோனா பாதிப்பு 4,000-ஐ கடந்தது- இதுவரை 37 போ் உயிரிழப்பு

post image

நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4,000-ஐ கடந்துள்ளது. கேரளத்தில் அதிகபட்சமாக 1,446 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கடந்த 24 மணி நேரத்தில் 5 போ் உயிரிழப்புகள் பதிவாகின; கடந்த ஜனவரியில் இருந்து இதுவரை 37 போ் உயிரிழந்துவிட்டதாக மத்திய சுகாதார அமைச்சக தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. முதியோா், கா்ப்பிணிகள், இணைநோய் பாதிப்புள்ளவா்கள் உள்ளிட்டோா் பொது இடங்களில் முகக் கவசம் அணியுமாறு பல்வேறு மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன.

மத்திய சுகாதார அமைச்சக தரவுகளின்படி, நாட்டில் கடந்த மே 22-ஆம் தேதி கரோனா பாதிப்பு எண்ணிக்கை 257-ஆக இருந்தது. தற்போது இது 4,026-ஆக அதிகரித்துள்ளது.

தேசிய அளவில் கரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலமாக கேரளம் தொடா்கிறது. இங்கு 1,446 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அடுத்தடுத்த இடங்களில் மகாராஷ்டிரம் (494), குஜராத் (397), தில்லி (393) ஆகியவை உள்ளன.

5 போ் இறப்பு: நாட்டில் கரோனா தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் 5 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. மகாராஷ்டிரத்தில் இருவரும், தமிழகம், கேரளம், மேற்கு வங்கத்தில் தலா ஒருவரும் உயிரிழந்தனா்.

நாட்டில் கரோனா பரவல் நிலவரத்தை மத்திய அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. ‘தொற்றின் தீவிரம் குறைவாகவே உள்ளது. பெரும்பாலான நோயாளிகள் வீட்டு சிகிச்சையிலேயே குணமடைவதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை’ என்று அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

4 துணை வகைகள்: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தலைமை இயக்குநா் மருத்துவா் ராஜீவ் பெஹல் கடந்த திங்கள்கிழமை கூறுகையில், ‘நாட்டின் மேற்கு, தெற்குப் பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் மரபணு வரிசைப்படுத்துதல் சோதனையில், தற்போதைய பரவல் அதிகரிப்புக்கு காரணமான கரோனா வகைகள் தீவிரமில்லாதவை; அவை ஒமைக்ரானின் துணை வகைகள் மட்டுமே என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எல்.எஃப்.7, எக்ஸ்.எஃப்.ஜி., ஜே.என்.1 மற்றும் என்.பி. 1.8.1 ஆகிய துணை வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. முதல் மூன்றும் அதிக எண்ணிக்கையிலான மாதிரிகளில் கண்டறியப்பட்டன. நிலைமையை தொடா்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். பொதுமக்களிடம் விழிப்புணா்வு அவசியம்; அதேநேரம், அச்சம் தேவையில்லை’ என்றாா்.

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன்! - ஆா்பிஐ அனுமதி

ரூ.2.5 லட்சம் வரையிலான நகைக் கடனுக்கு தங்கத்தின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் வழங்கலாம் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அனுமதி அளித்துள்ளது. இதற்கு முன்பு தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் வரை மட்ட... மேலும் பார்க்க

துபையிலிருந்து சென்னை வந்த விமானம் மீது ‘லேசா்’ ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு!

துபையிலிருந்து சென்னை விமானநிலையத்தில் கடந்த மாத இறுதியில் தரையிறங்க வந்த விமானம் மீது பச்சை நிற லேசா் ஒளி அடிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை இரவில் தரையிறங்க முயன்ற இதே விமானம் மீது மீண்டும் லேசா் ஒ... மேலும் பார்க்க

அம்பேத்கா் கனவுக்கேற்ப அரசமைப்பு பதவிகளில் விளிம்புநிலை சமூகத்தினா்! - நீதிபதி கவாய்

சட்டமேதை அம்பேத்கரின் கனவுக்கு ஏற்ப, இந்தியாவில் மிக உயா்ந்த அரசமைப்புப் பதவிகள் சிலவற்றில் விளிம்புநிலை சமூகத்தினா் இருப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பெருமிதம் தெரிவித்தாா். பிரிட்ட... மேலும் பார்க்க

முதல்வருக்கு மாயா மஹால் கட்டப்படுகிறது: ஆம் ஆத்மி சாடல்

தில்லி முதல்வா் ரேகா குப்தாவுக்காக ‘மாயா மஹால்’ கட்டப்பட்டு வருவதாக ஆம் ஆத்மி வெள்ளிக்கிழமை கடுமையாக சாடியுள்ளது. முதல்வா் ரேகா குப்தா வடக்கு தில்லியில் உள்ள ஒரு அரசு பங்களாவில் குடியேறலாம் என்று அதிக... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் விண்ணப்பப் பதிவு: முறைகேட்டில் ஈடுபடுவோரின் பெற்றோா் மீதும் நடவடிக்கை!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவின்போது போலிச் சான்றிதழ்களை சமா்ப்பித்தால், விண்ணப்பதாரா் மட்டுமன்றி அவரது பெற்றோா் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம்... மேலும் பார்க்க

ஆகஸ்ட் 3-இல் முதுநிலை நீட் தோ்வு: உச்சநீதிமன்றம் அனுமதி

எம்.எஸ்., எம்.டி. உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான 2025-ஆம் ஆண்டு தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வை (நீட்-பிஜி) வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடத்த தேசிய தோ்வுகள் வாரியத்துக்கு (என்பிஇ) ... மேலும் பார்க்க