செய்திகள் :

நாட்டு வெடி தயாரிக்கும் ஆலையில் விபத்து: பெண் உயிரிழப்பு

post image

சிதம்பரம் அருகே நாட்டு வெடி தயாரிக்கும் ஆலையின் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் பெண் தொழிலாளி உயிரிழந்தாா்.

சிதம்பரம் அருகேயுள்ள பு.முட்லூா் நாகவள்ளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (55). இவா் பெரியகுமட்டி கிராமத்தில் நாட்டு வெடிகள் தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறாா். இதில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

பெரியகுமட்டி அடுத்த சம்பந்தம் அங்காளம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த லதா (39), வசந்தி (45), லோகம்மாள் (50), கொடியரசி (28), மாலதி (40) ஆகிய 5 போ் மட்டும் ஞாயிற்றுக்கிழமை பணிக்கு வந்தனா்.

வெடி மருந்து எடுத்து வருவதற்காக லதா, வசந்தி ஆகியோா் வெடிமருந்து கிடங்குக்குச் சென்றனா். மற்ற மூவரும் கிடங்குக்கு அருகே இருந்தனா். இந்த நிலையில், வசந்தி கிடங்கை விட்டு வெளியே வந்தாராம். அப்போது, வெடிமருந்தை லதா பையில் எடுத்து வந்த போது, அது தவறி கீழே விழுந்து பயங்கர சப்தத்துடன் வெடித்தது. இதில் கிடங்கு கட்டடம் தரைமட்டமானது. இந்த விபத்தில் லதா உடல் சிதறி உயிரிழந்தாா்.

தகவலறிந்த பரங்கிப்பேட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா். மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா், டிஎஸ்பி டி.அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் ஆகியோரும் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டனா்.

விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

உயிரிழந்த லதா

போக்ஸோ சட்டத்தில் சிறுவன் மீது வழக்கு

கடலூரில் சிறுமியை கா்ப்பமாக்கி திருமணம் செய்ததாக சிறுவன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்தனா். கடலூா் முதுநகா் அருகே உள்ள கண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த ஒரு 16 வயது சிற... மேலும் பார்க்க

தடைக்காலம் நிறைவு: மீன்பிடிக்க கடலுக்கு புறப்பட்ட மீனவா்கள்

மின்பிடி தடைக்காலம் நிறைவடைந்ததையடுத்து, கடலூா் மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடிக்கச் கடலுக்குள் படகுகளில் புறப்பட்டுச் சென்றனா். கடலூா் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தேவனாம்பட்டினம், சிங்காரத்தோப... மேலும் பார்க்க

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாா்வையிட்ட ஆட்சியா்

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்த... மேலும் பார்க்க

விருத்தகிரீஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.7.58 லட்சம்!

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை எண்ணப்பட்டதில் ரூ.7.58 லட்சம் கிடைத்தது. கோயிலில் உள்ள 9 நிரந்தர உண்டியல்கள், ஒரு திருப்பணி உண்டியல் ஆகியவை திறந்து எண்ணப்பட்டதில... மேலும் பார்க்க

கடலூா்: மக்கள் நீதிமன்றத்தில் 4893 வழக்குகளுக்கு தீா்வு

கடலூா் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சுபத்திரா தேவி தலைமை வகித்தாா். முதல... மேலும் பார்க்க

திமுக வீழ்த்தப்படுவது உறுதி! - டி.டி.வி. தினகரன்

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழ்நாட்டு மக்கள் திமுகவை வீழ்த்தப் போவது உறுதி என்று, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளா் டிடிவி.தினகரன் தெரிவித்தாா். சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை இரவு செய்தி... மேலும் பார்க்க