ஏழுமலையான் தரிசனத்திற்கு 24 மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பு
நானும் மயானத்திலேயே தங்கிவிடுகிறேன்..! ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் மகனை இழந்த தந்தை வேதனை!
ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் மகனை இழந்த தந்தை ஒருவரின் வேதனையான செயல் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஐபிஎல் தொடங்கிய 18 ஆண்டுகளில் முதன்முதலாக கோப்பை வென்ற ஆர்சிபியின் மகிழ்ச்சியைக் கொண்டாட குவிந்த கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தார்கள்.
உயிரிழந்த 11 பேரில் பூமிக் லக்ஷ்மண் என்ற 21 வயது இளைஞரின் தந்தை பிடி லக்ஷமண் கல்லறையில் அழுதுகொண்டிருக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
கர்நாடகத்தில், ஹாஸன் மாவட்டத்தில் தனது மகனை அடக்கம் செய்த மயானத்திலேயே தானும் தங்கிவிடுகிறேன் என்ற தந்தையின் சோகம் பார்க்கும் அனைவரையும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது.
”எனது மகனுக்கு நடந்தது யாருக்குமே நடக்கக் கூடாது. நான் எங்கேயும் செல்ல விரும்பவில்லை. இங்கேயே தங்கிவிடுகிறேன்” எனக் கூறி மகனை புதைத்த இடத்திலேயே அழுத காட்சிகள் நெஞ்சை உலுக்குகின்றன.
ஆங்கில ஊடகத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், “எனக்கு இருந்தது ஒரே ஒரு மகன்தான். அவனது உடலை துண்டாக்காத்தீர்கள்” என உடல் கூறாய்வின்போது கூறியுள்ளார்.
கார்நாடக பிஜேபி அரசு இது குறித்து காங்கிரஸை, “நீங்கள் புகைப்படம் எடுக்க விரும்பியதால் 11 குடும்பங்கள் தினமும் கண்ணீரை துடைத்துக்கொண்டு இருக்கிறது” எனக் கடுமையாக விமர்சித்து வருகிறது.
இந்த விவகாரத்தில் ஆர்சிபி நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக கிரிக்கெட் கழகத்தின் செயலாளர், பொருளாளர் ராஜிநாமா செயததும் குறிப்பிடத்தக்கது.
The greatest pain a father can endure is to cremate his own child, a grief that defies time, reason, and healing.
— THE SKIN DOCTOR (@theskindoctor13) June 7, 2025
Lakshman refuses to leave the grave of his 20 yr old son, Bhumik, who died in the Bengaluru stampede. Buried on a small plot of land in their native village in… pic.twitter.com/qjbBgif6SQ
ಕೊಲೆಗಡುಕ ಸಿಎಂ @siddaramaiah ಅವರೆ, ಕೊಲೆಗಡುಕ ಡಿಸಿಎಂ @DKShivakumar ಅವರೆ,
— BJP Karnataka (@BJP4Karnataka) June 7, 2025
ನೀವು ಮನಸ್ಸು ಮಾಡಿದ್ದರೆ ಐಷಾರಾಮಿ ಹೋಟೆಲ್ನಲ್ಲಿ ನಿಮ್ಮ ಮಕ್ಕಳು ಹಾಗೂ ಮೊಮ್ಮಕ್ಕಳೊಂದಿಗೆ ಕಪ್ ಜೊತೆ ಫೋಟೋ ತೆಗೆಸಿಕೊಳ್ಳಬಹುದಿತ್ತು. ಆದರೆ ವಿಧಾನಸೌಧದ ಮೆಟ್ಟಿಲುಗಳ ಮೇಲೆಯೇ ಫೋಟೋ ತೆಗೆಸಿಕೊಳ್ಳಬೇಕೆಂಬ ನಿಮ್ಮ ಹಠ 11 ಕುಟುಂಬಗಳು ಪ್ರತಿನಿತ್ಯ… pic.twitter.com/l27yBoeiiX