செய்திகள் :

நானும் மயானத்திலேயே தங்கிவிடுகிறேன்..! ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் மகனை இழந்த தந்தை வேதனை!

post image

ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் மகனை இழந்த தந்தை ஒருவரின் வேதனையான செயல் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஐபிஎல் தொடங்கிய 18 ஆண்டுகளில் முதன்முதலாக கோப்பை வென்ற ஆர்சிபியின் மகிழ்ச்சியைக் கொண்டாட குவிந்த கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தார்கள்.

உயிரிழந்த 11 பேரில் பூமிக் லக்‌ஷ்மண் என்ற 21 வயது இளைஞரின் தந்தை பிடி லக்‌ஷமண் கல்லறையில் அழுதுகொண்டிருக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கர்நாடகத்தில், ஹாஸன் மாவட்டத்தில் தனது மகனை அடக்கம் செய்த மயானத்திலேயே தானும் தங்கிவிடுகிறேன் என்ற தந்தையின் சோகம் பார்க்கும் அனைவரையும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது.

”எனது மகனுக்கு நடந்தது யாருக்குமே நடக்கக் கூடாது. நான் எங்கேயும் செல்ல விரும்பவில்லை. இங்கேயே தங்கிவிடுகிறேன்” எனக் கூறி மகனை புதைத்த இடத்திலேயே அழுத காட்சிகள் நெஞ்சை உலுக்குகின்றன.

ஆங்கில ஊடகத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், “எனக்கு இருந்தது ஒரே ஒரு மகன்தான். அவனது உடலை துண்டாக்காத்தீர்கள்” என உடல் கூறாய்வின்போது கூறியுள்ளார்.

கார்நாடக பிஜேபி அரசு இது குறித்து காங்கிரஸை, “நீங்கள் புகைப்படம் எடுக்க விரும்பியதால் 11 குடும்பங்கள் தினமும் கண்ணீரை துடைத்துக்கொண்டு இருக்கிறது” எனக் கடுமையாக விமர்சித்து வருகிறது.

இந்த விவகாரத்தில் ஆர்சிபி நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக கிரிக்கெட் கழகத்தின் செயலாளர், பொருளாளர் ராஜிநாமா செயததும் குறிப்பிடத்தக்கது.

கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர், பொருளாளர் ராஜிநாமா!

கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர், பொருளாளர் தங்களது ராஜிநாமா கடிதத்தை அளித்துள்ளனர். ஆர்சிபி அணி முதல்முறையாக 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வி... மேலும் பார்க்க

விராட் கோலி மீது வழக்குப் பதிவு!

பெங்களூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்து காரணமாக விராட் கோலி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆர்சிபி அணி முதல்முறையாக 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றது. இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக ... மேலும் பார்க்க

பெங்களூரு கூட்டநெரிசல்: ஆர்சிபி நிர்வாகி உள்பட 4 பேர் கைது!

பெங்களூரில் ஆர்சிபி அணியின் வெற்றிப் பேரணியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் பலியான விவகாரத்தில், 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.முறையான முன்னேற்பாடுகள் இல்லாமல் பேரணிக்கு அனுமதி அளித்த... மேலும் பார்க்க

அடுத்த சீசனில் 2 மடங்கு நன்றாக விளையாடுவேன்: வைபவ் சூர்யவன்ஷி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 14 வயதான வைபவ் சூர்யன்ஷி இந்த சீசனில் முதல்முறையாக விளையாடினார். 7 போட்டிகளில் 252 ரன்கள் குவித்துள்ள இவர் 206.6 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி அசத்தினார். இந்தப் போட்டிகளில் அத... மேலும் பார்க்க

கொண்டாட்டத்தை விட உயிர் முக்கியமானது: கபில் தேவ்

பெங்களூரில் நடைபெற்ற விபத்து குறித்து முன்னாள் வீரர் கபில் தேவ் கொண்டாட்டத்தை விட உயிர் முக்கியமானது எனக் கூறியுள்ளார். ஆர்சிபி அணி 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக கோப்பை வென்றது. இதன் வெற்றிக் க... மேலும் பார்க்க

பலியானோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்! - ஆர்சிபி நிர்வாகம் அறிவிப்பு

வெற்றிப் பேரணி கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படுமென ஆர்சிபி அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங... மேலும் பார்க்க