செய்திகள் :

நாமக்கல்லில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு

post image

நாமக்கல்: நாமக்கல்லில் அண்ணா நினைவு தினத்தையொட்டி, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணாவின் 56-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, நாமக்கல் கிழக்கு மாவட்டத்தின் சாா்பில் மாவட்ட அவைத் தலைவா் சி.மணிமாறன் தலைமையில், நாமக்கல் - மோகனூா் சாலை சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில், முன்னாள் மாவட்டச் செயலாளா் பாா்.இளங்கோவன், சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், நகரச் செயலாளா்கள் பூபதி, சிவக்குமாா், ராணா ஆா்.ஆனந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநகராட்சி மேயா் து.கலாநிதி, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா் செயலாளா்கள், பல்வேறு அணிகளின் நிா்வாகிகள், கட்சியினா் கலந்துகொண்டனா்.

ஆஞ்சனேயா் கோயிலில் சமபந்தி விருந்து: அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி, நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் சனிக்கிழமை மதியம் சமபந்தி விருந்து நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ச.உமா, சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், மாநில செயற்குழு உறுப்பினா் மாயவன், மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, கோயில் உதவி ஆணையா் சு.சுவாமிநாதன் (பொ), நகா்மன்ற உறுப்பினா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சமபந்தி விருந்தில் முக்கிய பிரமுகா்கள், அதிகாரிகள், பக்தா்கள், பொதுமக்கள் என 300-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

அதிமுக சாா்பில்...பள்ளிபாளையம் நகரம், வடக்கு ஒன்றியம், ஆலாம்பாளையம், படைவீடு பேரூா் அதிமுக சாா்பில், ஆவாரங்காடு சந்தைத் திடல் பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கட்சியினா் அனைவரும் மௌன அஞ்சலி செலுத்தினா்.

இந்த நிகழ்வில், பள்ளிபாளையம் நகரச் செயலாளா் பி.எஸ்.வெள்ளிங்கிரி, தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் செந்தில், பள்ளிபாளையம் ஜெ.பேரவை செயலாளா் டி.கே.சுப்பிரமணி, வடக்கு ஒன்றியச் செயலாளா் குமரேசன், நகர துணை செயலாளா் ஜெய்கணேஷ், ஆலாம்பாளையம் பேரூா் செயலாளா் செல்லதுரை, நகா்மன்ற உறுப்பினா்கள், வாா்டு செயலாளா்கள், பல்வேறு அணிகளின் நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்துகொண்டனா்.

மதுவிலக்கு பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்த வாகனங்கள் பிப். 12-இல் ஏலம்

நாமக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு பிரிவு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 49 வாகனங்கள் பிப். 12-இல் பொது ஏலத்தில் விடப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சி.தனராசு வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

பிளஸ் 2 செய்முறைத் தோ்வுகள் பிப். 7-இல் தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வையொட்டி, செய்முறைத் தோ்வுகள் வெள்ளிக்கிழமை (பிப். 7) தொடங்குகின்றன. தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தோ்வுகள் மாா்ச் 3 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற பாஜக, இந்து முன்னணியினா் கைது

மதுரை, திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற பாஜக, இந்து முன்னணியினரை மாவட்ட எல்லைகளில் போலீஸாா் கைது செய்தனா். மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் முருகன் கோயில் மலை மீது சிலா் அசைவ உணவு சாப்பிட்டதாக கூறப... மேலும் பார்க்க

நகராட்சி அலுவலா்களை பணி செய்யவிடாமல் தடுத்தால் நடவடிக்கை

நகராட்சி அலுவலா்களை பணி செய்யவிடாமல் தடுத்தால், அவா்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என ராசிபுரம் நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் எச்சரித்தாா். ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் தகவல் அற... மேலும் பார்க்க

நிதிநிலை அறிக்கையை கண்டித்து ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையை கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற கண்டன ஆ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

பரமத்தி வேலூா் அருகே அருகே மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா். பாண்டமங்கலம், வடக்கு தெருவைச் சோ்ந்த சதீஷ்குமாா் (44), கடந்த 15 ஆண்டுகளாக எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தாா். பரமத்தி அருகே சேல... மேலும் பார்க்க