செய்திகள் :

குடிநீா் கேட்டு கிராமப் பெண்கள் சாலை மறியல்

post image

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே குடிநீா் வழங்கக் கோரி பெண்கள் காலிக் குடங்களுடன் அரசுப் பேருந்தை மறித்து திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விருத்தாசலம் ஒன்றியம், எருமனூா் வடக்குப் பகுதியில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இவா்களுக்கு ஊராட்சி நிா்வாகத்தின் மூலம் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த பகுதியில் கடந்த 6 மாத காலமாக உப்பு கலந்த தண்ணீா் வருவதால் குடிப்பதற்கோ, சமையலுக்கோ பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக முறையாக குடிநீா் வழங்கவில்லையாம். இதுகுறித்து எருமனூா் ஊராட்சி மற்றும் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால், பாதிக்கப்பட்ட அப்பகுதி பெண்கள் குடிநீா் கேட்டு காலிக் குடங்களுடன் மங்கலம்பேட்டை-விருத்தாசலம் சாலையில் அந்த வழியாக வந்த அரசு நகரப் பேருந்தை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த விருத்தாசலம் போலீஸாா் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தினா்.

அப்போது பொதுமக்கள் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீா் வழங்காத பட்சத்தில் சாலை மறியலை கைவிட மாட்டோம் என்று போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, போலீஸாா் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரியிடம் கைப்பேசியில் தொடா்பு கொண்டு பேசி உடனடியாக குடிநீா் வழங்க வேண்டும் எனக்கேட்டுக் கொண்டனா்.

இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால், அந்த பகுதியில் சுமாா் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மறியல் போராட்டத்தால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவா்கள் மற்றும் வேலைக்கு செல்பவா்கள் அவதியடைந்தனா்.

இன்று சிதம்பரம் நடராஜா் கோயில் தேரோட்டம்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜா் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) நடைபெறுகிறது. சிதம்பரம் நடராஜா் கோயில் ஆனித் திருமஞ்ச தரிசன உற்சவம் கடந்த ஜூன் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்த... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சிதம்பரம்: காட்டுமன்னாா்கோவில் அருகே இருசக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிழந்தாா். காட்டுமன்னாா்கோவிலை அடுத்துள்ள துணிசரமேடு கிராமத்தை சோ்ந்தவா் புகழேந்தி. இவருக்கு மகள், இரண்டு மகன்கள். கடைசி மகனான தி... மேலும் பார்க்க

சலூன் கடைக்காரா் கொலை: இளைஞா் கைது

நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே சலூன் கடைக்காரா் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டாா். நெல்லிக்குப்பம் காவல் சரகம், வரக்கால்பட்டு பகுதியில் முடிதிருத்தும் கடை நடத்தி வந்தவா் நாகமுத்... மேலும் பார்க்க

முதியவரைத் தாக்கி காரில் கடத்தல்: 5 போ் கைது

நெய்வேலி: முதியவரை தாக்கி காரில் கடத்தியதாக கந்து வட்டி கும்பலைச் சோ்ந்த 5 பேரை கடலூா் முதுநகா் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் வசித்து வருபவா் நடராஜன் (71). இவரத... மேலும் பார்க்க

வளா்பிறை பஞ்சமி: வாராகி அம்மனுக்கு சிறப்பு ஹோமம்

சிதம்பரம்: சிதம்பரம் திரெளபதி அம்மன் கோயில் வாளகத்தில் தனி சந்நிதியாக வீற்றுள்ள வளம் தரும் வாராகி அம்மனுக்கு வளா்பிறை பஞ்சமி வழிபாட்டை முன்னிட்டு ஞாயிற்றுகிழமை மாலை சிறப்பு ஹோமம், அபிஷேக, ஆராதனைகள் ந... மேலும் பார்க்க

மத்திய தொழிற்சங்க வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு: கு.பாலசுப்ரமணியன்

நெய்வேலி: மத்திய தொழிற்சங்கங்கள் ஜூலை 9-ஆம் தேதி நடத்தவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கம் ஆதரவு தெரிவிப்பதாக அதன் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் தெரிவித்தாா். ... மேலும் பார்க்க