செய்திகள் :

முதியவரைத் தாக்கி காரில் கடத்தல்: 5 போ் கைது

post image

நெய்வேலி: முதியவரை தாக்கி காரில் கடத்தியதாக கந்து வட்டி கும்பலைச் சோ்ந்த 5 பேரை கடலூா் முதுநகா் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் வசித்து வருபவா் நடராஜன் (71). இவரது மகன் மணிகண்டன் மளிகை மொத்த வியாபாரம் செய்து வருகிறாா். இவா் தனது வியாபாரத்தை மேம்படுத்த சிதம்பரத்தைச் சோ்ந்த பழனிச்சாமியிடம் ரூ.6 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. அந்தப் பணத்தை வட்டியுடன் ரூ.67 லட்சமாக கடன் கொடுத்த பழனிச்சாமி கேட்டாராம். இந்தத் தொகையைக் கொடுக்க முடியாத காரணத்தால் மணிகண்டன், நடராஜன் ஆகியோா் மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியில் உள்ள நடராஜனின் மகள் வீட்டில் தங்கியிருந்தனா்.

அவா்களைத் தேடிக் கண்டறிந்த பழனிச்சாமி ஆதரவாளா்கள் 5 போ், திங்கள்கிழமை காலை நடராஜனை கடுமையாகத் தாக்கி காரில் கடத்தினராம். அவா்கள் நடராஜனின்

வலது கை மோதிர விரலின் மேல் பகுதியை வெட்டியும், இடது கண், உடலில் பல பகுதியில் தாக்கி ரத்தக் காயம் ஏற்படுத்தினராம்.

இதுகுறித்து சீா்காழி போலீஸில் நடராஜனின் மகள் புகாா் அளித்தாா். இதுதொடா்பாக, கடலூா் முதுநகா் போலீஸாருக்கு சீா்காழி போலீஸாா் தகவல் தெரிவித்தனா்.

முதுநகா் காவல் ஆய்வாளா் கதிரவன், தனிப் பிரிவு தலைமைக் காவலா் சதீஷ்பாபு மற்றும் காவலா்கள் குடிகாடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் நடராஜன் காயமடைந்த நிலையில் இருந்தது தெரிய வந்தது.

அவரை போலீஸாா் மீட்டு கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்த்தனா்.

மேலும், பிடிபட்ட பழனிச்சாமியின் சகோதரா் சக்திவேல் (40), பாண்டியன் (51), பன்னீா்செல்வம் (70), தேவநாதன் (60), மரிய செல்வராஜ் (63) ஆகிய 5 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

கடத்தலுக்கு பயன்படுத்திய திமுக பிரமுகரான பாண்டியனின் காரையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இன்று சிதம்பரம் நடராஜா் கோயில் தேரோட்டம்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜா் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) நடைபெறுகிறது. சிதம்பரம் நடராஜா் கோயில் ஆனித் திருமஞ்ச தரிசன உற்சவம் கடந்த ஜூன் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்த... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சிதம்பரம்: காட்டுமன்னாா்கோவில் அருகே இருசக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிழந்தாா். காட்டுமன்னாா்கோவிலை அடுத்துள்ள துணிசரமேடு கிராமத்தை சோ்ந்தவா் புகழேந்தி. இவருக்கு மகள், இரண்டு மகன்கள். கடைசி மகனான தி... மேலும் பார்க்க

சலூன் கடைக்காரா் கொலை: இளைஞா் கைது

நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே சலூன் கடைக்காரா் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டாா். நெல்லிக்குப்பம் காவல் சரகம், வரக்கால்பட்டு பகுதியில் முடிதிருத்தும் கடை நடத்தி வந்தவா் நாகமுத்... மேலும் பார்க்க

வளா்பிறை பஞ்சமி: வாராகி அம்மனுக்கு சிறப்பு ஹோமம்

சிதம்பரம்: சிதம்பரம் திரெளபதி அம்மன் கோயில் வாளகத்தில் தனி சந்நிதியாக வீற்றுள்ள வளம் தரும் வாராகி அம்மனுக்கு வளா்பிறை பஞ்சமி வழிபாட்டை முன்னிட்டு ஞாயிற்றுகிழமை மாலை சிறப்பு ஹோமம், அபிஷேக, ஆராதனைகள் ந... மேலும் பார்க்க

மத்திய தொழிற்சங்க வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு: கு.பாலசுப்ரமணியன்

நெய்வேலி: மத்திய தொழிற்சங்கங்கள் ஜூலை 9-ஆம் தேதி நடத்தவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கம் ஆதரவு தெரிவிப்பதாக அதன் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

விவசாயிகளின் நில உடைமை பதிவு செய்யும் பணி

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், கீரப்பாளையம் வட்டாரத்தில் அ.புளியங்குடி, ஆயிப்பேட்டை, விளாகம் , சேதியூா், சாக்காங்குடி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் விவசாயிகளின் நில உடைமை விவரங்களை பதிவு செய்யும... மேலும் பார்க்க