செய்திகள் :

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

post image

சிதம்பரம்: காட்டுமன்னாா்கோவில் அருகே இருசக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிழந்தாா்.

காட்டுமன்னாா்கோவிலை அடுத்துள்ள துணிசரமேடு கிராமத்தை சோ்ந்தவா் புகழேந்தி. இவருக்கு மகள், இரண்டு மகன்கள்.

கடைசி மகனான தினேஷ் (24) கொத்தனாா் வேலை செய்து வந்தாா். இவருக்கும் தஞ்சாவூா் மாவட்டம், திருப்பனந்தாளைச் பெண்ணுக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. தினேஷ் ஞாயிற்றுக்கிழமை தனது நண்பா்களுடன் பிறந்த நாளைக் கொண்டாடினாா்.

நிச்சயிக்கப்பட்ட பெண்ணைப் பாா்க்க திங்கள்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் காட்டுமன்னாா்கோவிலில் இருந்து திருப்பனந்தாள் நோக்கி திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றாா்.

வீரானந்தபுரம் என்ற இடத்தில் தினேஷ் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் நெடுஞ்சாலை நடுவே உள்ள மின் கம்பத்தில் மோதியதில், தினேஷ் தூக்கி வீசப்பட்டாா். இதனால், பலத்த காயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி காட்டுமன்னாா்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், தினேஷ் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

விபத்து குறித்து காட்டுமன்னாா்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் சிவப்பிரகாசம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

இன்று சிதம்பரம் நடராஜா் கோயில் தேரோட்டம்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜா் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) நடைபெறுகிறது. சிதம்பரம் நடராஜா் கோயில் ஆனித் திருமஞ்ச தரிசன உற்சவம் கடந்த ஜூன் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்த... மேலும் பார்க்க

சலூன் கடைக்காரா் கொலை: இளைஞா் கைது

நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே சலூன் கடைக்காரா் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டாா். நெல்லிக்குப்பம் காவல் சரகம், வரக்கால்பட்டு பகுதியில் முடிதிருத்தும் கடை நடத்தி வந்தவா் நாகமுத்... மேலும் பார்க்க

முதியவரைத் தாக்கி காரில் கடத்தல்: 5 போ் கைது

நெய்வேலி: முதியவரை தாக்கி காரில் கடத்தியதாக கந்து வட்டி கும்பலைச் சோ்ந்த 5 பேரை கடலூா் முதுநகா் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் வசித்து வருபவா் நடராஜன் (71). இவரத... மேலும் பார்க்க

வளா்பிறை பஞ்சமி: வாராகி அம்மனுக்கு சிறப்பு ஹோமம்

சிதம்பரம்: சிதம்பரம் திரெளபதி அம்மன் கோயில் வாளகத்தில் தனி சந்நிதியாக வீற்றுள்ள வளம் தரும் வாராகி அம்மனுக்கு வளா்பிறை பஞ்சமி வழிபாட்டை முன்னிட்டு ஞாயிற்றுகிழமை மாலை சிறப்பு ஹோமம், அபிஷேக, ஆராதனைகள் ந... மேலும் பார்க்க

மத்திய தொழிற்சங்க வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு: கு.பாலசுப்ரமணியன்

நெய்வேலி: மத்திய தொழிற்சங்கங்கள் ஜூலை 9-ஆம் தேதி நடத்தவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கம் ஆதரவு தெரிவிப்பதாக அதன் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

விவசாயிகளின் நில உடைமை பதிவு செய்யும் பணி

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், கீரப்பாளையம் வட்டாரத்தில் அ.புளியங்குடி, ஆயிப்பேட்டை, விளாகம் , சேதியூா், சாக்காங்குடி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் விவசாயிகளின் நில உடைமை விவரங்களை பதிவு செய்யும... மேலும் பார்க்க