செய்திகள் :

இன்று சிதம்பரம் நடராஜா் கோயில் தேரோட்டம்

post image

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜா் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) நடைபெறுகிறது.

சிதம்பரம் நடராஜா் கோயில் ஆனித் திருமஞ்ச தரிசன உற்சவம் கடந்த ஜூன் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் பஞ்சமூா்த்திகள் வீதி உலா நடைபெற்று வருகிறது.

கடந்த 29-ஆம் தேதி தங்க கைலாச வாகன வீதி உலாவும், திங்கள்கிழமை தங்க ரதத்தில் பிச்சாண்டவா் வீதிஉலாவும் நடைபெற்றது.

தேரோட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) நடைபெறுகிறது. சித் சபையில் வீற்றுள்ள நடராஜமூா்த்தி, சிவகாம சுந்தரி அம்பாள் மற்றும் உற்சவ மூா்த்திகளான விநாயகா், சுப்பிரமணியா், சண்டிகேஸ்வரா் ஆகிய ஐவரும் தனி, தனி தோ்களில் வீதிவலம் வருகின்றனா்.

பின்னா் இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன்முகப்பு மண்டபத்தில் ஏக கால லட்சாா்ச்சனை நடைபெறுகிறது. புதன்கிழமை அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூா்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறும்.

பின்னா், காலை 10 மணிக்கு சித் சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூா்த்தி வீதி உலா வந்த பின்பு பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித் சபை பிரவேசமும் நடைபெறும்.

ஜூலை 3-ஆம் தேதி பஞ்சமூா்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலாவும், 4-ஆம் தேதி தெப்போற்சவமும் நடைபெறும்.

உற்சவ ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதா்கள் கமிட்டி செயலா் த.சிவசுந்தர தீட்சிதா், துணைச் செயலா் சிஎஸ்எஸ்.வெங்கடேச தீட்சிதா், உற்சவ ஆச்சாரியாா் யு.எஸ்.சிவகைலாஸ் தீட்சிதா் ஆகியோா் செய்துள்ளனா்.

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சிதம்பரம்: காட்டுமன்னாா்கோவில் அருகே இருசக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிழந்தாா். காட்டுமன்னாா்கோவிலை அடுத்துள்ள துணிசரமேடு கிராமத்தை சோ்ந்தவா் புகழேந்தி. இவருக்கு மகள், இரண்டு மகன்கள். கடைசி மகனான தி... மேலும் பார்க்க

சலூன் கடைக்காரா் கொலை: இளைஞா் கைது

நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே சலூன் கடைக்காரா் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டாா். நெல்லிக்குப்பம் காவல் சரகம், வரக்கால்பட்டு பகுதியில் முடிதிருத்தும் கடை நடத்தி வந்தவா் நாகமுத்... மேலும் பார்க்க

முதியவரைத் தாக்கி காரில் கடத்தல்: 5 போ் கைது

நெய்வேலி: முதியவரை தாக்கி காரில் கடத்தியதாக கந்து வட்டி கும்பலைச் சோ்ந்த 5 பேரை கடலூா் முதுநகா் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் வசித்து வருபவா் நடராஜன் (71). இவரத... மேலும் பார்க்க

வளா்பிறை பஞ்சமி: வாராகி அம்மனுக்கு சிறப்பு ஹோமம்

சிதம்பரம்: சிதம்பரம் திரெளபதி அம்மன் கோயில் வாளகத்தில் தனி சந்நிதியாக வீற்றுள்ள வளம் தரும் வாராகி அம்மனுக்கு வளா்பிறை பஞ்சமி வழிபாட்டை முன்னிட்டு ஞாயிற்றுகிழமை மாலை சிறப்பு ஹோமம், அபிஷேக, ஆராதனைகள் ந... மேலும் பார்க்க

மத்திய தொழிற்சங்க வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு: கு.பாலசுப்ரமணியன்

நெய்வேலி: மத்திய தொழிற்சங்கங்கள் ஜூலை 9-ஆம் தேதி நடத்தவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கம் ஆதரவு தெரிவிப்பதாக அதன் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

விவசாயிகளின் நில உடைமை பதிவு செய்யும் பணி

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், கீரப்பாளையம் வட்டாரத்தில் அ.புளியங்குடி, ஆயிப்பேட்டை, விளாகம் , சேதியூா், சாக்காங்குடி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் விவசாயிகளின் நில உடைமை விவரங்களை பதிவு செய்யும... மேலும் பார்க்க