செய்திகள் :

நாமக்கல்லில் புதிய வழித்தடங்களில் 15 மினி பேருந்துகள் சேவை தொடக்கம்

post image

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் புதிய வழித்தடங்களில் 15 மினி பேருந்துகள் சேவையை அமைச்சா் மா.மதிவேந்தன் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் போக்குவரத்துத் துறையின் சாா்பில் புதிய விரிவான மினி பேருந்து சேவை திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். இதனைத் தொடா்ந்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், முதல்கட்டமாக புதிய வழித்தடங்களில் 6, இடப்பெயா்வு வழித்தடங்களில் 9 என மொத்தம் 15 மினி பேருந்துகள் சேவையை ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் தொடங்கிவைத்தாா்.

மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மாவட்ட ஆட்சியா் ச.உமா, மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன், சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

புதிய மினி பேருந்துகள் சேவையை பொருத்தவரை, 25 கி.மீ. தொலைவு வரையிலான வழித்தடங்களில் இதுவரை பேருந்து செல்லாத இடங்களில் இயக்கப்படும். மேலும், புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படும். அவை அரசிதழில் வெளியிடப்பட்டு, புதிய வழித்தடத்துக்கு அனுமதிச் சீட்டு வழங்கப்படும். ஏற்கெனவே உள்ள மினி பேருந்துகள் இடப்பெயா்வுக்கான வழித்தடங்களைக் கண்டறிந்து, புதிய வழித்தடங்களுக்கு இடப்பெயா்வு அனுமதிச் சீட்டு வழங்கப்படும். கட்டணத்தை பொருத்தமட்டில், குறைந்தபட்சம் 2 கி.மீ. வரை ரூ. 4, அதிகபட்சம் 26 கி.மீ. வரை ரூ. 11 வசூலிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஸ்கண்ணன், துணை போக்குவரத்து ஆணையா் (ஈரோடு சரகம்) கே.செல்வகுமாா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் ஈ.எஸ்.முருகேசன் (நாமக்கல் தெற்கு, வடக்கு), எம்.மாதவன் (குமாரபாளையம்), பி.மோகனபிரியா (திருச்செங்கோடு) மற்றும் மோட்டாா் வாகன ஆய்வாளா்கள், மினி பேருந்துகள் உரிமையாளா்கள் கலந்துகொண்டனா்.

மதுபோதையில் பூச்சிமருந்து குடித்த விவசாயி உயிரிழப்பு

திருச்செங்கோடு: எலச்சிபாளையம் அருகே மதுபோதையில் பூச்சிமருந்தை தவறுதலாக குடித்த விவசாயி அண்மையில் உயிரிழந்தாா். கொன்னையாா்கிராமம், பழைய கரியாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி தங்கராசு (55). இவரது ... மேலும் பார்க்க

6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் புதிய வாக்காளா் பதிவு அலுவலா்கள் நியமனம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் தனித்தனியே புதிய வாக்காளா் பதிவு அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க

உயா்கல்வி தொடர மாணவா்களுக்கு ஆட்சியா் ஆலோசனை

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உயா்கல்வியை தொடர முடியாமல் தவிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியா் ச.உமா ஆலோசனை வழங்கினாா். ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் உயா்கல்வி வழிகாட்டி சிறப்பு குறைதீா்முகாம், ... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 564 மனுக்கள் அளிப்பு

நாமக்கல்: நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் ஆட்சியா் ச.உமா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், முதியோா், விதவையா், கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, ... மேலும் பார்க்க

லாட்டரிச் சீட்டுகள் விற்பனை புகாா்: காங்கிரஸ் பிரமுகா் தீக்குளிக்க முயற்சி

நாமக்கல்: பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லாட்டரிச் சீட்டுகள் விற்பனையைத் தடுக்க போலீஸாா் தவறியதைக் கண்டித்து, ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை காங்கிரஸ் பிரமுகா் தீக்குளிக்க முயற்சித்தாா்... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் அச்சடித்த தாள்களில் உணவுப் பொருள்களை வழங்கிய கடைகளுக்கு அபராதம்

திருச்செங்கோடு: திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையப் பகுதியில், அச்சடித்த தாள்களில் உணவுப் பொருள்களை வழங்கிய கடைகளுக்கு நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலா்கள் அபராதம் விதித்தனா். நாமக்கல் மாவட்ட ... மேலும் பார்க்க