G Madhavi Latha: மாதவி லதாவின் 17 ஆண்டுகால உழைப்பு; உலகின் உயரமான ரயில் பாலத்தின...
நாமக்கல்லில் விபத்தில் சிக்கிய எண்ணெய் லாரி: குடத்தில் பிடித்துச் சென்ற மக்கள்
நாமக்கல் அருகே எண்ணெய் ஏற்றிச் சென்ற டேங்கா் லாரி ஞாயிற்றுக்கிழமை விபத்தில் சிக்கிய நிலையில், அதில் இருந்து வெளியேறிய எண்ணெய்யை பொதுமக்கள் குடங்கள், வாளிகளில் பிடித்துச் சென்றனா்.
நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலை, புதன்சந்தை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை டேங்கா் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் லாரி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. அதில், லாரியின் பின்புறம் டேங்கா் சேதமடைந்து அதிலிருந்த எண்ணெய் கொட்டியது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் குடம், வாளிகளில் எண்ணெய்யை பிடித்துச் சென்றனா்.
தகவல் அறிந்து வந்த நல்லிபாளையம் போலீஸாா், பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினா். மேலும், சாலையில் கொட்டிய எண்ணெய்யால் விபத்து ஏற்படாமல் தடுக்க மண்ணைக் கொட்டினா். இந்த விபத்து தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தாராபுரத்தில் இருந்து மகாராஷ்டிரத்துக்கு நாமக்கல் வழியாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் சோயா எண்ணெய் ஏற்றிச் சென்ற லாரி, புதன்சந்தை மேம்பாலத்தின் மீது சென்றபோது திடீரென பழுதானதால் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது.
அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதால், டேங்கரில் இருந்து எண்ணெய் கீழே கொட்டியது. பொதுமக்கள் இந்த எண்ணெய்யை பிடித்துச் சென்ாக தெரியவந்துள்ளது. அந்த சோயா எண்ணெய்யானது சுத்திகரிக்கப்படாதது மற்றும் சமையலுக்கு உகந்தது அல்ல.
எனவே, அந்த எண்ணெய்யை பொதுமக்கள் யாரும் சமையலுக்கு பயன்படுத்த வேண்டாம். அவ்வாறு பயன்படுத்தினால் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளாா்.