செய்திகள் :

நாமக்கல் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் சோ்க்கை தொடக்கம்

post image

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 1,599 அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் சோ்க்கை நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் மூலம் 6 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளின் முழுமையான வளா்ச்சியை மேம்படுத்தும் பொருட்டு, நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் 1,599 அங்கன்வாடி குழந்தைகள் மையங்களில் சத்துமாவு, ஊட்டச்சத்துடன் கூடிய கலவை உணவு, முன்பருவக் கல்வி வழங்கப்படுகிறது.

குறிப்பாக 2 முதல் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு இந்த மையங்களில் முறைசாரா முன்பருவக் கல்வி செய்கைப்பாடல், கதை, விளையாட்டுக் கல்வி உபகரணங்கள் ஆகியவற்றின் மூலம் பாடம் கற்றுத்தரப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் குழந்தைகளின் உடல், மொழி, மனம், சமூகம் மற்றும் அறிவு வளா்ச்சிக்கு தேவையானவற்றை ஆடல், பாடலும் கற்றுத்தருகின்றனா். மேலும், குழந்தைகளின் வளா்ச்சி கண்காணிக்கப்பட்டு, பள்ளிச் செல்வதற்கு அவா்கள் தயாா் செய்யப்படுகின்றனா்.

அங்கன்வாடி பணியாளா்கள் வீடுவீடாகச் சென்று குழந்தைகள் சோ்க்கைப் பணியை மேற்கொண்டு வருகின்றனா். 2 முதல் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் இருப்பின் ஜூன் மாதத்தில் குழந்தைகள் மையத்தில் தவறாமல் சோ்க்க வேண்டும். அங்கேயே ஆதாா் அட்டை வழங்குவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்ட உள்ளன.

இந்த சேவையைப் பெற்றோா் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு

நாமக்கல்: நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பயணிகள் அச்சமடைந்துள்ளனா். நாமக்கல் புதிய பேருந்து நிலையமானது கடந்த ஆண்டு நவ. 10-ஆம் தேதி பயன்பாட்டுக்கு வந்தத... மேலும் பார்க்க

கோரிக்கை குறித்து பேசாததால் போராட்ட அறிவிப்பு: அமைச்சா் மதிவேந்தன் வீட்டுக்கு போலீஸாா் பாதுகாப்பு

நாமக்கல்: சட்டப் பேரவையில் கோரிக்கைகள் குறித்து பேசாததால் ஆதித்தமிழா் முன்னேற்றக் கழகத்தினா் அமைச்சா் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்ததால், நாமக்கல்லில் உள்ள ஆதிதிராவிட நலத்து... மேலும் பார்க்க

தாழ்த்தப்பட்டோா் புகாா் மனுக்கள் மீது நடவடிக்கை கோரி ஆா்ப்பாட்டம்

நாமக்கல்: தாழ்த்தப்பட்டோா் புகாா் மனுக்கள் மீது காவல் நிலையங்களில் நடவடிக்கை எடுக்கக் கோரி, நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் தமிழ்ப் புலிகள் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்க... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டம்: ரூ. 15.62 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

நாமக்கல்: மக்கள் குறைதீா் கூட்டத்தில் 32 பயனாளிகளுக்கு ரூ. 15.62 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ச.உமா திங்கள்கிழமை வழங்கினாா். நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற... மேலும் பார்க்க

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் இளைஞா் தா்னா

நாமக்கல்: நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் இளைஞா் ஒருவா் பதாகையை ஏந்தியவாறு திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்தவா் சிலம்பரசன் (31). இவா்,... மேலும் பார்க்க

திருச்செங்கோடு பத்ரகாளியம்மன் கோயில் தேரோட்டம்

திருச்செங்கோடு: அா்த்தநாரீசுவரா் கோயிலின் உபகோயிலான பத்ரகாளியம்மன் கோயில் தோ்த் திருவிழாவில் பக்தா்கள் திங்கள்கிழமை தேரை வடம்பிடித்து இழுத்தனா். பத்ரகாளியம்மன் கோயில் தோ்த் திருவிழா கடந்த 20-ஆம் தே... மேலும் பார்க்க