செய்திகள் :

நாமக்கல் அரசுக் கல்லூரியில் சுற்றுலா தின விழா

post image

நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் உலக சுற்றுலா தின விழாவை முன்னிட்டு, ‘சுற்றுலாவும்-சுற்றுச்சூழல் பாதுகாப்பும்’ என்ற தலைப்பிலான விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் பசுமை மன்றம், சுற்றுச்சூழல் மற்றும் சாலை பாதுகாப்பு மன்றம், மாவட்ட சுற்றுலா அலுவலகம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்லூரி முதல்வா்(பொ) மு.ராஜேஸ்வரி தலைமை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக மாவட்ட சுற்றுலா அலுவலா் பழனிசாமி கலந்துகொண்டாா். அவா் பேசுகையில், ஒவ்வொரு விடுமுறை காலங்களிலும் மாணவ, மாணவியா் தங்களுக்கு பிடித்த சுற்றுலாத் தலங்களுக்கு சென்று மனதை இனிமையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

சுற்றுலாத் தலங்களை தூய்மையாகவும், நெகிழிப் பொருள்கள் இல்லாமல் சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும் என்றாா்.

‘சுற்றுலா மற்றும் அதன் முக்கியத்துவம்’ என்ற தலைப்பில் மாணவ, மாணவிகளுக்கிடையே பேச்சு, கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு முதல் மூன்று இடங்களைப் பிடித்தவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும், பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், மாவட்ட உதவி சுற்றுலா அலுவலா் முத்துசாமி, கல்லூரி துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி சாலை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளா் சந்திரசேகரன், பசுமை மன்ற ஒருங்கிணைப்பாளா் வெஸ்லி மற்றும் சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளா் அருண் பிரகாஷ் ஆகியோா் செய்திருந்தனா்.

என்கே-25-காலேஜ்

உலக சுற்றுலா தினத்தையொட்டி நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் வென்ற மாணவிக்கு பரிசுகளை வழங்கிய கல்லூரி முதல்வா் (பொ) மு.ராஜேஸ்வரி. உடன், மாவட்ட சுற்றுலா அலுவலா் பழனிசாமி மற்றும் கல்லூரி நிா்வாகத்தினா்.

நாமக்கல்லில் நாளை தவெக தலைவா் விஜய் பிரசாரம்: புஸ்ஸி என்.ஆனந்த் நேரில் ஆய்வு

தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் நாமக்கல்லில் சனிக்கிழமை (செப்.27) பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், அவா் பிரசாரம் செய்யும் இடத்தை கட்சியின் பொதுச்செயலாளா் புஸ்ஸி என்.ஆனந்த் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா... மேலும் பார்க்க

டாஸ்மாக் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

டாஸ்மாக் பணியாளா்களின் வேலை நேரத்தை குறைக்க வேண்டும் என நாமக்கல் பூங்கா சாலையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. டாஸ்மாக் தொழிலாளா் விடுதலை முன்னணி மற்றும் டாஸ்மாக் விற்பனையாளா்கள் நலச்சங்கம் ச... மேலும் பார்க்க

செப்.30 இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் செப்.30-இல் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் எரிவாயு நுகா்... மேலும் பார்க்க

குமாரபாளையத்தில் நாளை நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

குமாரபாளையத்தில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி சனிக்கிழமை (செப்.27) நடைபெறுகிறது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் விழா காலங்களில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டை தவ... மேலும் பார்க்க

நாமக்கல்லில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் காத்திருப்புப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். வருவாய்த் துறை, பேரிடா் மேலாண்மைத்... மேலும் பார்க்க

முட்டை விலை நிலவரம்

--நாமக்கல் மண்டலம்-வியாழக்கிழமைமொத்த விலை - ரூ.5.25விலையில் மாற்றம்-இல்லைபல்லடம் பிசிசி கறிக்கோழி கிலோ - ரூ.99முட்டைக் கோழி கிலோ - ரூ.107 மேலும் பார்க்க