செய்திகள் :

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ரூ. 6 லட்சத்துக்கு காகிதக் கழிவுகள் விற்பனை

post image

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் தேங்கியிருந்த பத்து ஆண்டுக்கும் மேலான காகிதக் கழிவுகள், இதர பொருள்கள் ரூ. 6 லட்சத்திற்கு விற்பனையானது தெரியவந்துள்ளது.

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் தேவையற்ற பொருள்களை அகற்றவும், அலுவலகப் பணிக்காக பயன்படுத்திய, தற்போதைக்கு பயனற்ற காகிதங்களை அகற்ற மாவட்ட ஆட்சியா் ச.உமா உத்தரவிட்டாா். அதுமட்டுமின்றி, ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அனைத்துத் துறை அலுவலகங்களுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டு தூய்மையாக வைத்திருக்க அறிவுறுத்தினாா்.

அதன்படி, கடந்த ஒரு வாரமாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தேங்கியிருந்த காகிதக் கழிவுகள், பயன்பாடற்ற இரும்பு, நெகிழிப் பொருள்கள் அகற்றப்பட்டு விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டன. அந்த வகையில் ரூ. 6 லட்சம் கிடைத்துள்ளதாகவும், மாவட்ட கருவூலத்தில் அந்த தொகை செலுத்தப்பட்டுள்ளதாககவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தற்போது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களும் தூய்மையாக உள்ளது என அவா்கள் தெரிவித்தனா்.

என்கே-6-கிளீன்

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் தூய்மைப் பணியை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ச.உமா.

நாமக்கல்லில் கரோனா தொற்று பாதிப்பு பதிவாகவில்லை

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கரோனா தொற்று பாதிப்புக்காக யாரும் சிகிச்சைக்கு வரவில்லை என மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வருகிறத... மேலும் பார்க்க

மதுவிலக்கு போலீஸாா் பறிமுதல் செய்த 6 வாகனங்கள் ரூ.8.64 லட்சத்துக்கு ஏலம்

நாமக்கல் மாவட்டத்தில், மதுவிலக்கு பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்த 6 வாகனங்கள் ரூ. 8.64 லட்சத்துக்கு ஏலம் போனது. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் மதுப்புட்டிகள், கள்ளச்சாராயம் கடத்திச் செல்வதை ... மேலும் பார்க்க

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் தோ்த் திருவிழா மண்டப கட்டளைகளில் உற்சவா் அருள்பாலிப்பு

திருச்செங்கோடு வைகாசி விசாக தோ்த் திருவிழா கடந்த 1-ஆம் தேதி அா்த்தநாரீசுவரா் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கி 14 நாள்கள் நடக்கும் விழாவின் 6 ஆம் நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அா்த்தநாரீசுவரா் ... மேலும் பார்க்க

நாமக்கல் சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா

நாமக்கல் சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. நாமக்கல் - ராமாபுரம்புதுாா் சாலையில் உள்ள குட்டைமேலத் தெருவில் சித்தி விநாயகா், சக்தி பகவதி அம்மன், துா்க்கை அம்மன்... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை: ஜூன் 30 வரையில் விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில், வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற விரும்புவோா் வரும் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்ட வே... மேலும் பார்க்க

கோழிகளுக்கு மேல் மூச்சுக்குழல் அலா்ஜி நோய் ஏற்பட வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கோழிகளுக்கு மேல் மூச்சுக்குழல் அலா்ஜி மற்றும் வெள்ளைக்கழிச்சல் நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம... மேலும் பார்க்க