செய்திகள் :

நாமக்கல்: கிட்னி விற்பனையில் ஈடுபட்ட 2 புரோக்கர்கள் கைது; சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

post image

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் உள்ள விசைத்தறி கூலித் தொழிலாளர்களைக் குறிவைத்து சட்டவிரோதமாக கிட்னி விற்பனை செய்து வந்தது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விசைத்தறி கூலித் தொழிலாளர்களிடம் பணம் தருவதாக ஆசை வார்த்தைகளைக் கூறி, குறைந்த விலைக்குக் கிட்னி விற்பனை நடந்துள்ளதாகத் தகவல் கிடைத்தது.

கிட்னி வியாபாரம்

தகவலின் அடிப்படையில், நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ராஜ்மோகன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் குமாரபாளையம் அன்னை சத்யா நகரில் கடந்த ஜூன் மாதம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் பொதுமக்கள் அதிக அளவில் சட்டவிரோதமாகக் கிட்னி விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த சுகாதாரத்துறையினர் போலீசிடம் புகார் அளித்தனர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், இந்த சம்பவம் விசாரணை நடத்த தமிழக மருத்துவ திட்ட இயக்குனர் வினித் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது.

அந்த குழு நடத்திய விசாரணையில், போலி ஆவணங்களை தயாரித்து ஏழை விசைத்தறி கூலி தொழிலாளர்களிடம் சட்ட விரோதமாக கிட்னி விற்பனையில் ஈடுபட்டது.

குமாரபாளையம்
குமாரபாளையம்

இதில் புரோக்கர்களாக செயல்பட்டு குறைந்த விலைக்கு கிட்னியை விற்பனை செய்தது தெரியவந்தது. சட்டவிரோத கிட்னி விற்பனையில் ஈடுபட்ட இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, மதுரை உயர்நீதிமன்றம் தென்மண்டல காவல்துறை தலைவர் பிரேமானந்த் சிம்ஹா தலைமையில் விசாரணை குழு அமைத்தது.

இந்த நிலையில், சட்டவிரோதமாக கிட்னி விற்பனையில் ஈடுபட்ட புரோக்கர்கள் ஆனந்த் மற்றும் ஸ்டான்லி மோகன் ஆகிய இருவரையும் சிறப்பு புலனாய்வு குழு கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில் மேலும் பலர் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விளையாட்டாக கேபிளை இழுத்த சிறுவன்; ட்ரில்லிங் மெஷின் நெற்றியில் துளைத்து பலி - கேரளாவில் சோகம்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயில் மேற்கு வாசல் பகுதியை சேர்ந்தவர் மகேஷ். இவரது மனைவி சுனிதா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. மூத்த மகன் துருவ் நாத்துக்கு இரண்டரை வயது ஆகிறது. ... மேலும் பார்க்க

சபரிமலை: 417 கிராம் தங்கம் திருட்டு, 10 பேர் மீது வழக்கு - தேவசம் போர்டு தலைவர் சொல்வதென்ன?

சபரிமலை ஐயப்பன் கோவில் துவாரபாலகர் சிலையில் கவசங்கள் மீது தங்கம் பூசுவதாக கூறி, 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் அதை எடுத்துச் சென்று மோசடி செய்யப்பட்டதாகவும், 2019 ஆகஸ்ட் மாதம் ஐயப்பன் கோயில் கருவறை வாசலில... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: அரசுப் பேருந்தில் சென்ற பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை; நடத்துநர் போக்சோவில் கைது

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே ஒரு கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளி ஒன்றில் அப்பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 11 ஆம் தேதி ஒரத்தநாட்டில் உள்ள தனியார... மேலும் பார்க்க

Uttar Pradesh: சிறையில் காசோலை திருட்டு; விசாரணையில் பகீர் தகவல்; அதிகாரி, கைதிகள் சிக்கியது எப்படி?

உத்தரப்பிரதேச மாநிலம் அசாம்கர் மாவட்ட சிறைக்குச் சொந்தமான வங்கிக்கணக்கில் இருந்து சமீபத்தில் ரூ.2.6 லட்சம் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் எடுக்கப்பட்டு இருப்பதை சிறை அதிகாரி ஆதித்ய குமார் கண்டுபிட... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: மருத்துவ மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - 3 பேர் கைது; காவல்துறை விசாரணை

மேற்கு வங்கத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமைமேற்கு வங்கத்தில் அடிக்கடி மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஏற்கெனவே கொல்கத்தாவில் மருத்துவக் கல்லூரி பயிற்சி டாக்டர் பால... மேலும் பார்க்க

குஜராத்: போலி சம்மன், டிஜிட்டல் கைது மோசடியில் ரூ.100 கோடி கொள்ளை; தந்தை, மகன் உள்பட 4 பேர் கைது

நாடு முழுவதும் அடிக்கடி `டிஜிட்டல் கைது' மூலம் சைபர் கிரிமினல் பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. இதில் அதிக அளவில் பெண்கள் மற்றும் முதியவர்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழு... மேலும் பார்க்க