TVK: `சைக்கிள் மூலமா மாநாடு நடக்குற திடலுக்குப் போறோம்'- நடிகர் சௌந்தர ராஜன்
நாமக்கல் புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?
நாமக்கல் மாநகராட்சி புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா காணப்பட்ட நிலையில், மக்கள் பயன்பாட்டுக்கு வருவது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் முதலைப்பட்டிபுதூா் என்ற இடத்தில் ரூ. 20 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை முதல்வா் மு.க.ஸ்டாலின் பேருந்து நிலையத்தை திறந்து வைத்து நேரடியாகப் பாா்வையிட்டாா். இங்கு, ஒரே நேரத்தில் 50-க்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்தும் வகையில் இடவசதி உள்ளது.
பயணிகளின் வசதிக்காக 57 கடைகள், இரண்டு பெரிய உணவகங்கள், நவீன கட்டணக் கழிப்பிட வசதி, 200 இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், நான்கு சக்கர வாகனங்களுக்கான நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் பேருந்து நிலைய வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள இந்த பேருந்து நிலையத்தில் உள்ள 57 கடைகளில் 34 கடைகள் ஏற்கெனவே பொது இடத்தில் விடப்பட்டுள்ளன. மீதமுள்ள 23 கடைகளுக்கு வெள்ளிக்கிழமை ஏலம் நடைபெற்றது.
பேருந்து நிலையம் திறப்பு விழா காணப்பட்ட நிலையில், பயன்பாட்டுக்கு வராதது குறித்து மக்களிடையே கேள்வி எழுந்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்கு பிறகு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தற்போது பண்டிகை காலமாக இருப்பதால் மக்கள் தேவையற்ற சிரமத்துக்கு ஆளாகக் கூடாது என்பதால், தீபாவளி பண்டிகைக்கு பிறகு புதிய பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். பழைய பேருந்து நிலையம் வழக்கம் போல செயல்பாட்டில் இருக்கும். புதிய பேருந்து நிலையத்துக்கு வரும் வகையில் நகரப் பேருந்துகள் இயக்கப்படும். இது தொடா்பாக போக்குவரத்துக் கழகங்களுக்கும் உரிய கடிதம் வழங்கப்பட்டு விட்டது என்றாா்.