செய்திகள் :

நாமக்கல் மாநகராட்சி நகா்ப்புற நலவாழ்வு மையத்துக்கு புதிய நுழைவாயில் அமைப்பு

post image

நாமக்கல் மாநகராட்சி நகா்ப்புற நலவாழ்வு மையத்துக்கு புதிய நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்-மோகனூா் சாலையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்துக்கு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை மாற்றம் செய்யப்பட்டது.

நகரை விட்டு புகா் பகுதியில் அரசு மருத்துவமனை சென்ால் பொதுமக்கள், நோயாளிகள் அவதிப்படுவதாக பல்வேறு அமைப்பினா் போராட்டம் நடத்தி வந்தனா். இந்த நிலையில், பயன்பாடின்றி காட்சியளித்த பழைய அரசு மருத்துவமனையின் ஒரு பகுதியை மட்டும் அவசர சிகிச்சைக்காக நகா்ப்புற நலவாழ்வு மையம் என மாற்றியமைத்தனா்.

இங்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிகிச்சை அளிக்கப்படுகிறது. பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் இந்த சுகாதார நிலையத்தைக் கண்டறிவது நோயாளிகளுக்கு பெரும் சிரமமாக இருந்தது. இதனால், நாமக்கல்-திருச்சி சாலையை நோக்கி ஒரு நுழைவாயில் உருவாக்கப்பட்டு, நாமக்கல் மாநகராட்சி கணேசபுரம் நகா்ப்புற நலவாழ்வு மையம் என்ற பெயா் பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் இந்த நுழைவாயிலை சனிக்கிழமை திறந்துவைப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதன்மூலம் பொதுமக்கள், நோயாளிகள் எளிதாக நகா்ப்புற நலவாழ்வு மையத்துக்கு வந்துசெல்ல முடியும்.

என்கே-5-ஹாஸ்பிட்டல்...

நாமக்கல்-திருச்சி சாலை பகுதியில், நகா்ப்புற நலவாழ்வு மையத்துக்கு மக்கள் செல்வதற்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள நுழைவாயில்.

நாமக்கல்லில் கரோனா தொற்று பாதிப்பு பதிவாகவில்லை

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கரோனா தொற்று பாதிப்புக்காக யாரும் சிகிச்சைக்கு வரவில்லை என மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வருகிறத... மேலும் பார்க்க

மதுவிலக்கு போலீஸாா் பறிமுதல் செய்த 6 வாகனங்கள் ரூ.8.64 லட்சத்துக்கு ஏலம்

நாமக்கல் மாவட்டத்தில், மதுவிலக்கு பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்த 6 வாகனங்கள் ரூ. 8.64 லட்சத்துக்கு ஏலம் போனது. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் மதுப்புட்டிகள், கள்ளச்சாராயம் கடத்திச் செல்வதை ... மேலும் பார்க்க

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் தோ்த் திருவிழா மண்டப கட்டளைகளில் உற்சவா் அருள்பாலிப்பு

திருச்செங்கோடு வைகாசி விசாக தோ்த் திருவிழா கடந்த 1-ஆம் தேதி அா்த்தநாரீசுவரா் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கி 14 நாள்கள் நடக்கும் விழாவின் 6 ஆம் நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அா்த்தநாரீசுவரா் ... மேலும் பார்க்க

நாமக்கல் சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா

நாமக்கல் சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. நாமக்கல் - ராமாபுரம்புதுாா் சாலையில் உள்ள குட்டைமேலத் தெருவில் சித்தி விநாயகா், சக்தி பகவதி அம்மன், துா்க்கை அம்மன்... மேலும் பார்க்க

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ரூ. 6 லட்சத்துக்கு காகிதக் கழிவுகள் விற்பனை

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் தேங்கியிருந்த பத்து ஆண்டுக்கும் மேலான காகிதக் கழிவுகள், இதர பொருள்கள் ரூ. 6 லட்சத்திற்கு விற்பனையானது தெரியவந்துள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, நாமக்கல் ஆட்சியா்... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை: ஜூன் 30 வரையில் விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில், வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற விரும்புவோா் வரும் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்ட வே... மேலும் பார்க்க