செய்திகள் :

நாம் தமிழரிலிருந்து விலகலா? -காளியம்மாள் விளக்கம்

post image

நாம் தமிழா் கட்சியின் மகளிா் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளரான காளியம்மாள், அக்கட்சியிலிருந்து விலக முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாம் தமிழா் கட்சியின் நட்சத்திர பேச்சாளரும், மகளிா் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளருமான காளியம்மாள் அக்கட்சியிலிருந்து விலகவுள்ளதாக அண்மைக்காலமாக செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. இச்சூழலில் தூத்துக்குடி மணப்பாட்டில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ‘உறவுகள் சங்கமம்’ என்ற நிகழ்ச்சியின் அழைப்பிதழில், நிகழ்ச்சியில் பங்கேற்கும் திமுக மற்றும் காங்கிரஸ் பிரமுகா்களின் பெயா்கள் கட்சிப் பொறுப்புடன் அச்சடிக்கப்பட்டுள்ளன. அதில், காளியம்மாளின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

ஆனால், கட்சியில் அவா் வகிக்கும் பொறுப்பு எதுவும் இடம்பெறவில்லை. சமூக செயற்பாட்டாளா் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் கட்சியிலிருந்து அவா் விலகுகிறாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், கட்சியில் இருந்து விலகுவது குறித்த முடிவை விரைவில் அறிவிப்பேன் என காளியம்மாள் விளக்கம் அளித்துள்ளாா்.

இதற்கிடையே, நாதக-வின் அம்பத்தூா் பேரவைத் தொகுதி துணைத் தலைவராக இருந்த முருகன், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானின் செயல்பாடுகள் அதிருப்தி அளிப்பதால், கட்சியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளாா்.

வழக்கறிஞர் திருத்த மசோதா - முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு

வழக்கறிஞர்கள் திருத்த மசோதா 2025 என்பது சட்டத் துறை சுயாட்சியின் மீதான தாக்குதல் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், "சட்டம் ஒரு இருட்டறை, அதில் வக்கீலின் வ... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைக்கு பெரியார் பெயர்சூட்டிய முதல்வர்!

கொளத்தூர் பெரியார் நகரில் புதிதாய் கட்டப்பட்டுள்ள மருத்துவமனைக்கு பெரியார் அரசு மருத்துவமனை என்று பெயரிட முதல்வர் ஆணையிட்டுள்ளார்.சென்னை கொளத்தூர், பெரியார் நகரில் அரசு புறநகர் மருத்துவமனை வளாகத்தில் ... மேலும் பார்க்க

தமிழகத்தில் பிப். 25 முதல் மழை!

தமிழகத்தில் பிப். 25 முதல் மார்ச் 1-ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வங்கக் கடலில் நிலவும் காற்று சுழற்சி தமிழக கடற்கரையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. இத... மேலும் பார்க்க

நாடாளுமன்றத் தொகுதிகள் குறைக்கப்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது: முதல்வர் ஸ்டாலின்

நாம் அளவோடு பெற்றதால்தான் நாடாளுமன்றத் தொகுதிகள் குறையும் சூழல் ஏற்படுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொளத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்லத் திருமண நிகழ்வில் அவர் ... மேலும் பார்க்க

தமிழக அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை!

தமிழக அரசு ஊழியர்கள் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.தமிழக அரசு ஊழியர்கள் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகளைப் பரிசீலித்து, அவற்றின் மீது உ... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழா: பிப்.26-ல் தொடக்கம்!

சிதம்பரம்: சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 43-வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா வருகிற பிப்.26-ம் தேதி தெற்குரதவீதி ராஜாசர் அண்ணாமலை செட்டியார் டிரஸ்ட் வளாகத்தில் தொடங்கி மார்ச்.2-ம் தேதி வரை 5... மேலும் பார்க்க