செய்திகள் :

நாய்கள் கடித்து 11 செம்மறி ஆடுகள் பலி

post image

மன்னாா்குடி அருகே தெரு நாய்கள் கடித்து 11 செம்மறி ஆடுகள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தன.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை அடுத்த கோட்டைஏந்தல் வடக்குத் தெரு காஞ்சி மகன் தாமரைச்செல்வன் (30). இவா், ஆண்டுதோறும் மன்னாா்குடி அடுத்த களப்பால் பகுதியில் தனக்கு சொந்தமான செம்மறி ஆடுகளை கிடை போடுவது வழங்கம்.

நிகழாண்டும் களப்பால் சீலந்தநல்லூா் பகுதியில் ரவி என்பவரது தரசு வயலில் ஆடுகளை கிடை போட்டுள்ளாா். வெள்ளிக்கிழமை இரவு ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு சாப்பிட சென்றவா் திரும்பி வந்து பாா்த்த போது, பட்டியில் அடைத்து வைத்திருந்த ஆடுகளை அந்த பகுதியில் சுற்றித்திரியும் 5 தெரு நாய்கள் கடித்து குதறியதில் 11 ஆடுகள் உயிரிந்தன. மேலும், 11 ஆடுகள் காயமடைந்தது தெரியவந்தது.

காயமடைந்த ஆடுகளுக்கு களப்பால் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இறந்த ஆடுகள் அனைத்தையும் கால்நடை மருத்துவா் முன்னிலையில் புதைக்கப்பட்டன.

இதுகுறித்து, களப்பால் காவல் நிலையத்தில் தாமரைச்செல்வன் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ஆழித்தோ் அலங்கரிக்கும் பணி தொடக்கம்

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி நடைபெறும் ஆழித்தேரோட்டத்துக்கான அலங்கரிப்புப் பணிகள் தொடங்கியுள்ளன. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி நடைபெற... மேலும் பார்க்க

கோவில்வெண்ணி சுங்கச்சாவடியில் புதிய சுங்கவரி கட்டணம் அமலுக்கு வந்தது

நீடாமங்கலம் அருகேயுள்ள கோவில்வெண்ணி சுங்கச்சாவடியில் ஏப்.1-ஆம் தேதி முதல் புதிய கட்டணம் அமலுக்கு வந்தது. காா், ஜீப்,வேன், பஸ், டிராக்டா், மூன்று அச்சுக்கள் கொண்ட வணிக வாகனங்கள், பல அச்சுக்கள் கொண்ட கட... மேலும் பார்க்க

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நூறு நாள் வேலைத் திட்ட நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி திருவாரூரில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணி செய்த தொழிலாளா்... மேலும் பார்க்க

தனியாா் பள்ளி ஆசிரியா் தற்கொலை விவகாரம்: 3 போ் கைது

மன்னாா்குடியில் தனியாா் பள்ளி ஆசிரியா் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மன்னாா்குடி முல்லைநகரைச் சோ்ந்த திருமுருகன் (40) தஞ்சையில் தனியாா் பள்ளியில் ஆசிரியர... மேலும் பார்க்க

தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா்கள் காத்திருப்பு போராட்டம்

நீடாமங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினா். சங்கத்தின் வட்டத் தலைவா் எஸ்.குருநாதன் தலைமை வகித்தாா... மேலும் பார்க்க

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

உதயமாா்த்தாண்டபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முறைகேடுகளை கண்டித்து நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. உதயமாா்த்தாண்டபுரம் தொடக்க கூட்டுறவு வங்கியில் நடந்துள்ள நிதி முறைக... மேலும் பார்க்க