செய்திகள் :

நாராயணமூர்த்தி மறைவு: ``கலைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த மனிதர்'' - காயத்ரி ஜெயராம் இரங்கல்

post image

'மனதை திருடிவிட்டாய்' இயக்குநர் நாராயணமூர்த்தி மறைவிற்கு நடிகை காயத்ரி ஜெயராம் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

2001 ஆம் ஆண்டு பிரபுதேவா, வடிவேலு, காயத்ரி ஜெயராம், கெளசல்யா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'மனதை திருடி விட்டாய்'.

இந்தப் படத்தில் பிரபுதேவா - வடிவேலு கூட்டணியில் அமைந்த காமெடிகள் அனைத்தும் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்த ஹிட் படத்தை நாராயணமூர்த்திதான் இயக்கி இருந்தார்.

'மனதை திருடிவிட்டாய்'
'மனதை திருடிவிட்டாய்'

தவிர, சன் தொலைக்காட்சியில் வெளிவந்த 'நந்தினி', 'ராசாத்தி', 'ஜிமிக்கி கம்மல்', 'அன்பே வா', 'மருமகளே வா' போன்ற தொடர்களை இயக்கியிருந்தார்.

இந்நிலையில் உடல்நலக் குறைவால் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாராயணமூர்த்தி மாரடைப்பால் நேற்று (செப். 23) உயிரிழந்திருக்கிறார்.

அவரின் மறைவிற்கு நடிகை காயத்ரி ஜெயராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில்,

" நான் இன்று வரை 'மஞ்சக் காட்டு மைனா' என்று அழைக்கப்படுகிறேன் என்றால் அதற்கு காரணம் என் முதல் தமிழ்ப்படமான 'மனதை திருடிவிட்டாய்' படத்தை இயக்கிய நாராயணமூர்த்தி சார் தான்.

பல வருடங்கள் கழித்து நாங்கள் 'நந்தினி' சீரியலிலும் இணைந்து பணியாற்றினோம். தன்னை கலைக்கே முழுமையாக அர்ப்பணித்த ஒரு மனிதர். இன்று காலை அவர் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.

'மனதை திருடிவிட்டாய்' படம் வெளியாகி 24 ஆண்டுகள் ஆகிவிட்டன. இருந்தாலும் அந்த படம், பாடல்கள், காமெடிகள் எல்லாம் இன்று வரை மக்களால் நினைவுகூரப்படுகின்றன.

அதுபோலவே நீங்களும் என்றும் நினைவுகூரப்படுவீர்கள் சார்" என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

``ஒருவர் தானாகவே இசையமைப்பாளர் ஆகிவிடுவதில்லை'' - ஏ.ஆர். ரஹ்மான் வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடிப்பில் ... மேலும் பார்க்க

ஜெயிலர் 2 ரிலீஸ் எப்போது? - ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்

ஜெயிலர் இரண்டாம் பாகம் படத்தின் ஷூட்டிங்கிலிருந்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்திடம் விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் கேள்விகளை முன்வைத்தனர். நேற்றைய தினம் நடைபெற்ற தேசிய விருதுகள் வழங்கும் நி... மேலும் பார்க்க

'மனதை திருடிவிட்டாய்' இயக்குநர் நாராயணமூர்த்தி காலமானார்; திரையுலகினர் இரங்கல்

'மனதை திருடிவிட்டாய்' இயக்குநர் நாராயணமூர்த்தி மாரடைப்பால் காலமானார். பிரபுதேவா, காயத்ரி ரகுராம், வடிவேலு நடித்த 'மனதை திருடி விட்டாய்', மற்றும் 'ஒரு பொண்ணு ஒரு பையன்' படங்களை இயக்கியவர் நாராயணமூர்த்த... மேலும் பார்க்க

'இது இந்துக்கள் - இந்து அல்லாதோருக்கு இடையேயான பிரச்னை இல்லை'- உணவு ஆர்டர் குறித்து சாக்‌ஷி அகர்வால்

தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் நடிகை சாக்ஷி அகர்வால் சோசியல் மீடியா பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இதுமட்டுமின்றி மாடலிங்கிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். இந... மேலும் பார்க்க

கலைமாமணி விருது: "சாய் பல்லவி, எஸ்.ஜே. சூர்யா, லிங்குசாமி" - தொடர்ந்து வெளியாகும் பட்டியல்

தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாட்டின் கலை மற்றும் இலக்கியத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது கலைமாமணி விருது. தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் வழங்கப்படும் இந்த விரு... மேலும் பார்க்க

National Awards: ``இரண்டு பெண்களிடமிருந்து விருது பெற்றிருப்பது பெருமை!'' - விருது வென்ற பின் ஊர்வசி

71-வது தேசிய விருது வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்றது.தாதா சாகேப் விருது பெறும் மோகன் லால், தேசிய விருது பெறும் ஷாருக் கான், ஜி.வி.பிரகாஷ், ஊர்வசி, எம்.எஸ். பாஸ்கர், `பார்க்கிங்' பட இயக்குநர் ... மேலும் பார்க்க