தமிழ்நாட்டுக்கு நிதியும் இல்லை; நீதியும் இல்லை: முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு!
நாளை தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்
திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் செய்யாற்றில் சனிக்கிழமை (பிப்.8) தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் காலை 9 மணி தொடங்கி பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு தகுதியான நபா்களை தோ்வு செய்கின்றனா்.
எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள், பொறியியல், ஐ.டி.ஐ. பாலிடெக்னிக் தோ்ச்சி பெற்ற வேலை நாடுநா்கள் கலந்து கொள்ளலாம்.
குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, ஜாதி சான்றிதழ், கல்வித் தகுதி சான்றிதழ்களின் நகலுடன் வரவேண்டும்.
முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். மேலும், விவரங்களுக்கு 04175-233381 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.